களனி ஆற்றில் 5 வயது குழந்தையை எறிந்த பெண் வழங்கியுள்ள வாக்குமூலம்
வத்தளை - மட்டக்குளி பிரதான பாலத்திலிருந்து 5 வயது சிறுவனை களனி ஆற்றில் வீசிய சம்பவம் கைது செய்யப்பட்ட சந்தேகநபரான பெண் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
ஆற்றுக்குள் வீசப்பட்ட 5 வயது சிறுவன்
வத்தளை - மட்டக்குளி பிரதான பாலத்திலிருந்து பெண்ணொருவர் 5 வயது சிறுவனை களனி ஆற்றில் வீசிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில் அந்த பெண்ணும் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்ததாக கூறப்படும் நிலையில் அப்பகுதி மக்களால் மடக்கி பிடிக்கப்பட்ட நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
5 வயது சிறுவனை பாலத்தில் வீசிய பெண்: கொழும்பில் சம்பவம்(Video) |
இதேவேளை ஆற்றில் வீசப்பட்ட சிறுவன் இதுவரையில் மீட்கப்படாத நிலையில் அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
வாக்குமூலம்
அத்துடன் தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் தற்போது சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
அதன்படி குடும்ப நெருக்கடி காரணமாகவே தான் இதனை செய்துள்ளதாக சந்தேகநபர் பொலிஸாரிடம் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் தற்கொலை செய்து கொள்ள முயற்சி செய்த பெண் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில் அந்த கணவர் இறந்துவிட்டார் என்பதுடன், அவருக்கு முதல் திருமணத்தின் மூலம் 15 வயது பிள்ளை உள்ளதாகவும் கூறப்படுகிறது.
42 வயதான அந்த பெண் வத்தளை பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்டவர் எனவும், அவர் சில காலமாக நோயினால் அவதிப்பட்டு வருவதாகவும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும், சந்தேகநபர் 5 வயது சிறுவனின் தாய் என கூறப்படும் நிலையில், சம்பவம் தொடர்பான தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.