சர்வதேச நாணய நிதியத்தின் உதவி பெற்றுக்கொள்ளப்படும்! - அரசாங்கம் அறிவிப்பு
சர்வதேச நாணய நிதியத்தின் உதவிகளையும் ஆலோசனைகளையும் பெற்று ஏனைய நிறுவனங்களுடன் இணைந்து செயற்படுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணை அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ் பத்திரன இதனை குறிப்பிட்டுள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
"கடந்த 50 ஆண்டுகளில் 29 முறை இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து உதவி மற்றும் கடன்களைப் பெற்றுள்ளது. அந்த வகையில் மிகப்பெரிய கடன் 2009 இல் பெறப்பட்டது." எனவே நாங்கள் அதில் வலுவான நிலையில் இல்லை.
அரசு சர்வதேச நாணய நிதியத்தின் உதவி மற்றும் ஆலோசனையைப் பெறும் மற்றும் பிற நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும்."
"அரசாங்கம் ஏற்கனவே உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியுடன் இணைந்து செயற்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam