கடற்றொழிலாளர் விவகாரத்தில் தமிழக அரசின் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு
இந்திய - இலங்கை கடற்றொழிலாளர் விவகாரத்தில் தமிழக அரசு அசமந்த போக்குடன் செயற்படுவதாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் செயலாளர் என். எம் ஆலம் தெரிவித்துள்ளார்.
மன்னாரில் (Mannar) இன்றையதினம் வெள்ளிக்கிழமை (09.08.2024) மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“இந்திய கடற்றொழிலாளர்களின் அத்து மீறிய வருகை தொடர்பாக நாங்கள் தொடர்ந்தும் பேசி வருகிறோம். நேற்றையதினம் வியாழக்கிழமை மன்னார் தெற்கு கடல் பகுதியில் வைத்து 4 படகுகளில் வந்த 35 இந்திய கடற்றொழிலாளர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நாங்கள் தொடர்ச்சியாக முன்வைக்கின்ற கோரிக்கைகளை உதாசீனம் செய்கின்ற வகையில் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்து மீறிய நடவடிக்கையும் அதனால் கைது நடவடிக்கைகளும் இடம்பெறுகின்றது.
குறிப்பாக வடக்கு மாகாண கடற்பரப்பில் இவ்வாறான அத்துமீறலும், தடை செய்யப்பட்ட தொழில் முறைகளையும் செய்யாதீர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |