அரசுக்கு ஜேவிபி வழங்கியுள்ள அறிவுரை
இலங்கையில் ஏற்கனவே தொற்றுநோய் மற்றும் வருமான இழப்பால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் மக்கள் மீது மேலும் சுமையை சுமத்தாமல் அதிகரித்த எரிபொருள் விலையை திரும்பப் பெறுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜேவிபி இந்த வலியுறுத்தலை விதித்துள்ளது. தற்போதைய நிலையில் மக்களின் நன்மையைக் கருதி எரிபொருட்களின் விலையை அதிகரிக்காமல் 'எரிபொருள் விலை உறுதிப்படுத்தல் நிதி' ஏன் பயன்படுத்தப்படவில்லை என்று ஜேவிபியின் அரசியல் பீட உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி இன்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் கேள்வி எழுப்பினார்.
உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வின் போது மக்களுக்கு பயனளிக்கும் நோக்கில் கடந்த ஆண்டு அரசாங்கம் இந்த நிதியை நிறுவியதாக சுனில் ஹந்துன்நெத்தி தெரிவித்தார்.
கடந்த ஆண்டு ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை மக்களுக்கு 40 அமெரிக்க டாலராகக் குறைந்தபோது 200 பில்லியன் டொலர் நிதியை திரட்ட அரசாங்கம் திட்டமிட்டது.
எனினும் அந்த நிதிக்கு என்ன ஆனது என்று தாம் அரசாங்கத்திடம் கேட்பதாக ஹந்துன்நெத்தி குறிப்பிட்டார்.
மக்கள் தப்பிப்பிழைக்க எந்த வழியும் இல்லாமல் கஷ்டப்படுகையில், அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தடையின்றி உயர்ந்துள்ள நிலையில், இந்த முக்கியமான கட்டத்தில் ஏன் இந்த நிதி பயன்படுத்தப்படவில்லை என்று அவர் வினவினார்.
பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் தொற்று நிலைமை காரணமாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் வழக்கத்திற்கு மாறாக உயர்ந்தன என்றும், எரிபொருள் விலை உயர்வுடன் நிலைமை மோசமடையும்.
எரிபொருள் விலை உயர்வு அனைத்து துறைகளையும் பாதிக்கும், இதன் விளைவாக
போக்குவரத்து செலவு மற்றும் பேருந்துக்கட்டணங்கள் அதிகரிக்கும். மக்கள் இதை
இப்போது தாங்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.