கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தின் 66ஆவது நாள் கவனயீர்ப்பு நிகழ்வு (Photos)
வடக்கு - கிழக்கு மக்களுக்கு கெளரவமான அரசியல் தீர்வை கோரும் பயணத்தின் 66ஆவது நாள் கவனயீர்ப்பு போராட்டம் இடம் பெற்றுள்ளது.
குறித்த போராட்டமானது நேற்று (05.10.2022) கிளிநொச்சி - பூநகரி பிரதேசத்தின் முட்கொம்பன் சந்தை வீதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அரசியல் தீர்வு
“கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்” எனும் தொனிப்பொருளில் வடக்கு - கிழக்கில் உள்ள 8 மாவட்டங்களில் 100 நாட்கள் நடைபெறவுள்ள செயல்திட்டத்தின் 66ஆவது நாள் கவனயீர்ப்பு போராட்டம் வடக்கு- கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவின் ஏற்பாட்டில் இடம்பெற்றுள்ளது.
குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கிராம மக்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், இளைஞர்கள், விவசாயிகள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.
பல்வேறு கோரிக்கைகள்
இளைஞர்கள், பொது மக்கள், சிவில் அமைப்புக்கள் மற்றும் பெண்கள் இணைந்து, தங்களுக்கு நிரந்தரமான அரசியல் உரிமை வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறித்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டம் வடக்கு - கிழக்கு பகுதிகளில் தொடர்ச்சியாக சுழற்சி முறையில்
100 நாட்கள் வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




