தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட போகும் 44 சுகாதார தொழிற்சங்கங்கள்
சுகாதார சேவை தொழிற்சங்கங்கள் நாளைய தினம் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நாளைய தினம் காலை 7.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட உள்ளது.
தாதியர்கள், சுகாதார உதவியாளர்கள், சாரதிகள், சிற்றூழியர்கள் உள்ளிட்ட ஒரு லட்சத்திற்கும் முற்பட்ட பணியாளர்கள் இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரசாங்க தாதியர் ஒன்றியத்தின் தலைவர் சமன் ரட்னப்பிரிய இந்த போராட்டம் குறித்து அறிவித்துள்ளார்.
நாளைய தினம் அனைத்து வைத்தியசாலைகளிலும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கோவிட் பணிகளில் ஈடுபடுவதற்காக வழங்கப்பட்ட 7500 ரூபா கொடுப்பனவை அரசாங்கம் இடைநிறுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.