இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிப்பு
இயற்பியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக உலக நோபல் சபை அறிவித்துள்ளது.
அளவியல், மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம், அமைதி ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைப்பவர்களுக்கு ஆண்டு தோறும் நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கும் பணி நேற்று முதல் ஆரம்பமாகியுள்ளது.

ஐ.நாவில் இடம்பிடித்த நீதிபதி இளஞ்செழியன்: பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ள நீதிபதி சரவணராஜாவின் வெளியேற்றம்(Video)
இயற்பியல் துறை
இதன் முதற்கட்டமாக மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இயற்பியல் துறையில் சாதித்த 3 பேருக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 3 விஞ்ஞானிகளான பியரி அகோஸ்தினி, பெரங்க் க்ரவுஸ், ஆனி ஹுலியர் ஆகியோருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு கூட்டாக அளிக்கப்படவுள்ளது.
இதற்கமைய அணுக்கள், மூலக்கூறுகளுக்குள் இருக்கும் எலக்ட்ரான்களை ஆராய்வதற்கான சோதனைகளுக்காக இந்த நோபல் பரிசு குறித்த விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.





காணாமல் ஆக்கப்பட்டோர் தினமும் தாய்மாரின் கண்ணீரும்....! விடை தான் என்ன 20 மணி நேரம் முன்

நடிகர் பிரபு தேவாவின் பிரம்மாண்ட வீட்டை நீங்கள் பார்த்து இருக்கீங்களா.. புகைப்படங்கள் இதோ Cineulagam
