இந்தியர்களின் 200ஆவது வருட நினைவேந்தல் நிகழ்வு: கண்டனம் தெரிவித்துள்ள சட்டத்தரணி
யாழ்ப்பாண நண்பர்கள் அமைப்பு மற்றும் யாழ். இந்திய துணைத்தூதரகம் இணைந்து நடத்தும் ''இந்தியர்களின் 200ஆவது வருட நினைவேந்தல்'' எனும் நிகழ்விற்கு சட்டத்தரணி தம்பையா ஜெயரட்னராஜா கண்டனம் வெளியிட்டுள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் எமது செய்தி சேவையிடம் நேற்று (18.03.2023) அவர் கருத்து தெரிவிக்கையில்,
யாழ்ப்பாண நண்பர்கள் அமைப்பு மற்றும் யாழ். இந்திய துணைத்தூதரக அனுசரணையுடன் இலங்கைவாழ் இந்தியர்களின் 200ஆவது வருட நினைவேந்தல் உற்சவம் என தலைப்பிடப்பட்ட நிகழ்வொன்றில் அழைப்பிதலை சமூக ஊடகங்களில் காண முடிந்தது.
இந்நிலையில் மலையக மக்களை சிறுமைப்படுத்தும் வகையில் இலங்கைவாழ் இந்தியர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளமையை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.
மலையக மக்களாகிய நாம் பல உயிர் தியாகங்கள் செய்து இந்த நாட்டின் பொருளாதாரத்திற்கு ஆணி வேராக இருக்கின்றோம்.
நாம் இந்தியர்கள் அல்ல, இது எமது நாடு, நாம் இந்த நாட்டின் குடியுரிமையை பெற்றவர்கள், எமது தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்காக நாம் போராடிக்கொண்டிருக்கின்றோம்.
நினைவேந்தல் எனும் சொல்லுக்கு பொருள் தெரியாத நபர்கள் ஏற்பாடு செய்துள்ள இந்த நிகழ்விற்கு பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை தலைமை தாங்குவது எமக்கு கவலையாக உள்ளது என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பிலான முழுமையான விபரங்களை உள்ளடக்கி வருகின்றது பின்வரும் காணொளி,





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 2 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரையுலக பிரபலங்கள்.. லிஸ்டில் இடம்பிடித்த ஒரே ஒரு தமிழ் நடிகர்! யார் தெரியுமா? Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
