நீதிபதி நாட்டிலிருந்து வெளியேறியதன் பின்னணியில் சரத் வீரசேகர: நாடாளுமன்றில் அம்பலம்(Video)

Parliament of Sri Lanka Sarath Weerasekara Thavarasa Kalaiarasan
By Mayuri Oct 04, 2023 12:00 PM GMT
Report

நீதிபதி சரவணராஜா மீது தொடர்ச்சியாக இராணுவப் புலனாய்வு, அரச புலனாய்வின் பார்வை இருந்ததன் காரணமாகவும் சரத் வீரசேகர போன்றவர்களின் தொடர்ச்சியான அழுத்தங்கள் இருந்ததன் காரணமாகவும் ஏற்படுத்தப்பட்ட உயிர் அச்சுறுத்தல் நிமித்தமே அவர் இந்த நாட்டைவிட்டு அவசர அவசரமாகச் சென்றுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் வைத்து உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், ஒவ்வொரு பிரதேசங்களிலும் மத்தியஸ்த சபைகளை உருவாக்கி அந்த பிரதேசங்களில் இருக்கின்ற பிரச்சினைகளை இலகுவாக இனம்கண்டு சரியான தீர்வுகளை அந்த மக்கள் பெறுகின்ற ஒரு விடயம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

ஐ.நாவில் இடம்பிடித்த நீதிபதி இளஞ்செழியன்: பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ள நீதிபதி சரவணராஜாவின் வெளியேற்றம்(Video)

ஐ.நாவில் இடம்பிடித்த நீதிபதி இளஞ்செழியன்: பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ள நீதிபதி சரவணராஜாவின் வெளியேற்றம்(Video)

மத்தியஸ்த சபைகள்

அவ்வாறான மத்தியஸ்த சபைகளை வலுப்படுத்தி எதிர்காலத்திலே இந்த நாட்டில் ஒரு நியாயமான தீர்வுகளை மக்களுக்கு வழங்கும் சபையாக இவை மாற்றப்பட வேண்டும்.

நீதிபதி நாட்டிலிருந்து வெளியேறியதன் பின்னணியில் சரத் வீரசேகர: நாடாளுமன்றில் அம்பலம்(Video) | Thavarasa Kalaiyarasan Parliament Speech

நிகழ்நிலைக் காப்புச் சட்டம் என்று சொல்லப்டுகின்ற போது இந்த நாடாக இருக்கலாம் சர்வதேசமாக இருக்கலாம் சமூக வலைதளங்கள் அதேபோன்று தனியார் ஊடகத்துறை போன்றன சுதந்திரமாக இயங்குகின்ற போதே நாட்டில் நடக்கின்ற அனைத்து விடயங்களும் இலகுவில் அறிந்து கொள்ளக் கூடிய சூழல் இருக்கும்.


இந்த நிலைமையில் தற்போது கொண்டுவரப்படும் இந்த நிகழ்நிலைக் காப்புச் சட்டமானது சமூக வலைதளங்கள், ஊடகங்கள் மீதான அடக்குமுறையாக அமைந்துவிடக்கூடாது. எமது நாடு இன்று மிக மோசமான இலஞ்ச ஊழலைச் சந்தித்து, பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடாக இருந்து கொண்டிருக்கின்றது.

பல்கலைக்கழக அனுமதி தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்

பல்கலைக்கழக அனுமதி தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்

இலஞ்சம், ஊழல்

எமது நாடு மீட்சி பெற வேண்டுமெனில் இலஞ்சம், ஊழல் என்கின்ற அடிப்படைகளில் இருந்து விடுபட வேண்டும். இதனை நாங்கள் அனைவரும் இணைந்தே செயற்படுத்த வேண்டும். இந்த நாட்டிலே மிக மோசமான ஊழல் நடைபெற்றிருக்கின்றது. கடந்த ஆண்டு சீனி இறக்குமதியில் ஏற்பட்ட ஊழல், எக்ஸ்பிரஸ் பேள் கப்பல் எரிந்த விடயத்திலும் கூட பாரிய ஊழல்கள் இடம்பெற்றிருக்கின்றன.

நீதிபதி நாட்டிலிருந்து வெளியேறியதன் பின்னணியில் சரத் வீரசேகர: நாடாளுமன்றில் அம்பலம்(Video) | Thavarasa Kalaiyarasan Parliament Speech

இவ்வாறான ஊழல்களை வெளியில் கொண்டு வந்ததில் தனியார் தொலைக்காட்சிகள், சமூக வலைதளங்களின் பங்கு இன்றியமையாததாக இருக்கின்றது. அந்த வகையில் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் இந்த விடயங்களை உடனுக்குடன் வெளியில் கொண்டு வந்து மக்களையும், அரசியல்வாதிகளையும் விழிப்படையச் செய்தன.

எனவே இந்த ஊடகங்களை, சமூக வலைதளங்களை இறுக்குகின்ற, அடக்குகின்ற விடயத்திற்கு இந்த நாடு செல்ல முடியாது என்பதில் நாங்கள் குறியாக இருக்கின்றோம். இவ்வாறான சட்டமூலங்கள் எதிர்காலத்தில் இந்த நாட்டிலே ஒரு நியாயப்பாடான விடயங்களை முன்னெடுப்பதற்கு உறுதுணையாக அமையாது.

இன்று இந்த நாட்டின் நிலை என்ன நீதிபதிகள் தங்களுக்கு அச்சுறுத்தல் என்றும், தங்களின் கடமைகளை சட்டத்திற்குட்பட்டு செய்ய முடியாது என்றும் பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறுகின்ற நிலைமையே காணப்படுகின்றது.

பச்சிளம் சிசுவை அடித்துக் கொன்ற தாய் கைது

பச்சிளம் சிசுவை அடித்துக் கொன்ற தாய் கைது


நாட்டிலிருந்து வெளியேறிய நீதிபதி

முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா இந்த நாட்டைவிட்டு வெளியேறியமையும், இந்த வெளியேற்றத்திற்குக் காரணமாக முல்லைத்தீவு குருந்தூர் மலை விவகாரம் மற்றும் மனித புதைகுழி விடயத்தில் அரசிற்கு சார்பான தீர்ப்பு வரமுடியாத நிலைமையும், சரத் வீரசேகர போன்றவர்கள் குருந்தூர் மலையில் இருந்து வெளியேற்றப்பட்டமையும், தியாகதீபம் திலீபனின் நினைவு ஊர்தி கிராமம் கிராமமாகச் சென்று மக்கள் அஞ்சலிக்கான அனுமதியை வழங்கியமையுமே காரணம் எனப் பலரும் கருத்துகளை முன்வைக்கின்றார்கள்.

நீதிபதி நாட்டிலிருந்து வெளியேறியதன் பின்னணியில் சரத் வீரசேகர: நாடாளுமன்றில் அம்பலம்(Video) | Thavarasa Kalaiyarasan Parliament Speech

உண்மையிலேயே இந்த நாட்டில் நீண்டகாலமாக தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட அடக்குமுறை இருப்பதை அனைவரும் அறியாமல் இல்லை. இதன் நிமித்தமே மக்கள் பிரதிநிதிகளாகிய நாங்கள் எங்கு சென்றாலும் எங்கள் பின்னால் புலனாய்வுத்துறை கண்காணித்துக் கொண்டே இருக்கின்றது.

அதேபோன்றே நீதிபதி சரவணரராஜா மீது தொடர்ச்சியாக இராணுவப் புலனாய்வு, அரச புலனாய்வின் பார்வை இருந்ததன் காரணமாகவும் சரத் வீரசேகர போன்றவர்களின் தொடர்ச்சியான அழுத்தங்கள் இருந்ததன் காரணமாகவும் ஏற்படுத்தப்பட்ட உயிர்அச்சுறுத்தல் நிமித்தமே அவர் இந்த நாட்டைவிட்டு அவசர அவசரமாகச் சென்றுள்ளார். இந்த விடயம் இந்த நாட்டுக்கும், நீதித்துறைக்கும் ஒரு சவாலான விடயமே.

அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்

அரசாங்க ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்


எனவே இந்த நாட்டில் நீதித்துறை சுயாதீனமாக இயங்குவதற்கு இடமளிக்க வேண்டும். ஆனால் இங்கு நிலைமை அவ்வாறில்லை என்பதற்கு பல உதாரணங்களை கூற முடியும். அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் சகாவாக இருந்த அசாத் மௌலானா கருத்தொன்றை தெரிவித்துள்ளார்.

ஜோசப் பரராசசிங்கத்தின் கொலை வழக்கு

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அமரர் ஜோசப் பரராசசிங்கத்தின் கொலை வழக்கில் கூட நூறு வீதம் தீர்ப்பு சந்திரகாந்தனுக்கு எதிராக இருந்த நிலையில் நீதிபதியை மாற்றி திர்ப்பினை மாற்றம் செய்தோம் என்று தெரிவித்துள்ளார்.

நீதிபதி நாட்டிலிருந்து வெளியேறியதன் பின்னணியில் சரத் வீரசேகர: நாடாளுமன்றில் அம்பலம்(Video) | Thavarasa Kalaiyarasan Parliament Speech

அது மாத்திரமல்லாமல் கிழக்கு மாகாண ஆளுநராக இருந்த ஹிஸ்புல்லா கூட ஆலயம் இருந்த இடத்தை உடைத்து அங்கு சந்தை அமைத்தாகவும், அந்த சந்தர்ப்பத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாரிய எதிர்ப்புக்கு மத்தியில் இதன் மீதான சட்ட நடவடிக்கைகளின் போது நீதிபதியை மாற்றி தனக்குச் சாதகமாக தீர்ப்பைப் பெற்றதாகவும் அவர் பல பிரச்சார மேடைகளில் வெளிப்படையாகப் பேசியிருக்கின்றார்.

தரம் 5 புலமைப்பரிசில் பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை

தரம் 5 புலமைப்பரிசில் பிரத்தியேக வகுப்புகளுக்கு தடை

 

இவ்வாறான விடயங்கள் எல்லாம் இந்த நாட்டில் நீதித்துறை எவ்வாறெல்லாம் இருந்திருக்கின்றது என்பதையே உணர்த்துகின்றன. ஒருபோதும் இந்த நாட்டில் நீதித்துறை சுயமாக இயங்கவில்லை என்பதையே காட்டுகின்றது. ஆளுந்தரப்பு அரசியல்வாதிகளின் அழுத்தங்களுக்கும், அவர்கள் நினைக்கின்ற விடயங்களைச் சாதிக்கும் விதத்திலேயும் தான் இந்த நீதித்துறை செயற்பட்டுக் கொண்டிருக்கிறது.

இவ்வாறான விடயங்களை இனியும் அனுமதிக்கக் கூடாது. இந்த நாட்டிலே நீதியான, நியாயமான, சமத்துவமான அரசாங்கம் இயங்க வேண்டும். அது நாட்டு மக்களைப் பாதுகாப்பதாகவே இருக்க வேண்டும் என கூறியுள்ளார். 

 

தமிழர் பகுதியில் சிவில் சமூக செயற்பாட்டாளர் மீது ஆயுதமுனையில் உயிரச்சுறுத்தல்(Video)

தமிழர் பகுதியில் சிவில் சமூக செயற்பாட்டாளர் மீது ஆயுதமுனையில் உயிரச்சுறுத்தல்(Video)

 

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


நன்றி நவிலல்

வவுனிக்குளம், Aarau, Switzerland, Boswil, Switzerland

19 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், நீர்வேலி, வவுனியா

18 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு

18 Jun, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

18 Jun, 2016
7ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம், மல்லாவி, பிரான்ஸ், France

07 Jun, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கிளிநொச்சி, Lützelflüh, Switzerland

21 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, கந்தர்மடம், Markham, Canada

16 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, Villepinte, France

18 Jun, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு, Toronto, Canada

14 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், London, United Kingdom

18 Jun, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, Oberhausen, Germany

16 Jun, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, கொழும்பு, Georgetown, Guyana, Edgware, United Kingdom

17 Jun, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
35ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், செங்காளன், Switzerland

17 Jun, 1991
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், திருகோணமலை, பரிஸ், France

08 Jul, 2016
12ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கனடா, Canada

18 Jun, 2014
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
மரண அறிவித்தல்

மானிப்பாய், London, United Kingdom

09 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US