அநுரவிற்கு சிக்கலை ஏற்படுத்தப் போகும் சவேந்திர சில்வாவின் முடிவு
தமிழர் பகுதியில் பெரும் பேசுபொருளாக மாறிவரும் யாழ். தையிட்டி விவகாரம் குறித்து பல்வேறு தரப்புகளில் இருந்து விமர்சனங்கள் எழுகின்றன.
கடந்த 2020ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் தையிட்டி திஸ்ஸ விகாரை அமைக்கப்பட்டது.
மைத்திரி - ரணிலின் நல்லாட்சி காலப்பகுதியில் குறித்த விகாரை கட்டுமான பணிகளுக்கு தடை விதிக்க கோரி நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று நிலுவையில் இருந்தது.
இருப்பினும், அதேசேமயத்தில், முன்னாள் பாதுகாப்பு படைகளின் பிரதானி சவேந்திர சில்வா தையிட்டி விகாரையின் அடிக்கல் நாட்டு விழாவிற்கு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சென்றிருந்தார்.
இது, தமிழர் பகுதியை பௌத்த மயமாக்குவதற்கான ஒரு நுணுக்கமான அரசியல் தந்திரோபாயமாக இருக்குமா என்னும் சந்தேகம் பலர் மத்தியில் இருக்கின்றது.
இந்த விடயம் குறித்து விரிவாக ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி,

யாழ். செம்மணியில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதிக்கு தமிழ் அரசியல்வாதிகள் திடீர் விஜயம்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
