குரங்கு அம்மை நோய் தொடர்பில் பரிசோதனைகளை ஆரம்பிக்கவுள்ள இலங்கையின் முன்னணி பல்கலைக்கழகம்
உலக நாடுகளில் தற்போது வேகமாக பரவி வரும் குரங்கு அம்மை நோய் தொற்று தொடர்பில் பரிசோதனையை மேற்கொண்டு நோய்த்தொற்றை கண்டறிவதற்கான வசதிகள் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை எதிர்ப்பு சக்தி, ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சந்திம ஜீவந்ர டுவிட்டர் பதிவொன்றை இட்டு இதனை தெரிவித்துள்ளார்.
Anyone who is concerned about Sri Lanka's capacity to test and diagnose #monkeypox : Our lab has all the necessary infrastructure to diagnose and we have already ordered the necessary reagents which will arrive next week.
— Chandima Jeewandara (@chandi2012) May 21, 2022
மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் குரங்கு அம்மை தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்,வேகமாக பரவத்தொடங்கியுள்ளது.
ஜேர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம், இத்தாலி, நெதர்லாந்து, போர்த்துக்கல், ஸ்பெயின், சுவீடன் மற்றும் ஐக்கிய இராச்சியத்திலும், மற்றும் அமெரிக்கா, கனடா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் குரங்கு அம்மை நோய் தொற்று தீவிரமடைந்துள்ளது.
இதுவரையில், இந்த நோய் தொற்றினால் ஐரோப்பாவில் 80க்கும் அதிக குரங்கு அம்மை நோயாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர்.