லண்டனில் ஒரே நாளில் எதிரெதிர் கொள்கைகளுக்காக பேரணி: பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு
லண்டனில் இன்றையதினம் (26.10.2024) புலம்பெயர்தலை எதிர்க்கும் வலதுசாரி மற்றும் இனவெறுப்பை எதிர்க்கும் இடதுசாரி ஆகிய அமைப்புக்கள் ஒரே நாளில் பேரணி நடாத்த திட்டமிட்டுள்ளதால் அப்பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
புலம்பெயர்தல் மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பு அமைப்பு லண்டனின் விக்டோரியா ரயில் நிலையத்தில் பேரணி நடத்த திட்டமிட்டுள்ள அதேவேளை, பிரித்தானிய நாடாளுமன்றத்துக்கு அருகில் இனவெறுப்பு எதிர்ப்பு அமைப்பு மற்றும் வர்த்தக யூனியன்கள் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளன.
இவ்வாறு ஒரே நாளில் எதிரெதிர் கொள்கைகள் கொண்ட அமைப்புக்கள் பேரணி நடத்த திட்டமிட்டுள்ளதால் அப்பகுதியில் பதற்றம் ஏற்படலாம் என கூறப்படுவதோடு பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
பிரித்தானியவில் வன்முறை
அத்துடன், மத்திய லண்டனில் இன்றையதினம் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், இவ்வாறான சவால்களை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக பிரித்தானிய பொலிஸ் இணை ஆணையரான ரெச்சல் வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூலை மாத இறுதியில் சௌத்போர்ட் பகுதியில் மூன்று சிறுவர்கள் கொல்லப்பட்டமைக்கு புலம்பெயர்ந்த ஒருவரே காரணம் என தவறான தகவல் பரவிய நிலையில், பிரித்தானியாவில் வன்முறை வெடித்தது.

இதனைத் தொடர்ந்து, புகலிடக் கோரிக்கையாளர்களை குறிவைத்து நடாத்தப்பட்ட தாக்குதல்களில் 1,500 பேர் வரை கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 12 மணி நேரம் முன்
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri