கொழும்பில் ஐ.ஓ.சி எரிபொருள் நிலையம் முன்பாக பதற்றம்: பெருமளவில் இராணுவத்தினர் குவிப்பு (Video)
கொழும்பு - மஹரகம ஐ.ஓ.சி எரிபொருள் நிலையம் முன்பாக பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.
நிலைமையை கட்டுக்குள் கொண்டு வருவதற்காக பெருமளவு இராணுவ அதிகாரிகள் குவிக்கப்பட்டுள்ளது. மேலும் இராணுவ அதிகாரிகளை கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மக்கள் விசனம்
எரிபொருள் நிலையத்திற்கு முன்பாக பெருமளவில் மக்கள் திரண்டு கோசங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாட்டில் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணை இல்லையென மக்கள் தெரிவித்து வருவதுடன் எரிபொருள் நிலையம் முன்பாக போராட்டத்தில் ஈடுபடுவதால் அங்கு பெரும் பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
அடுத்த வாரம் முதல் இலங்கை முற்றாக முடங்குகிறது! வெளியான தகவல் |