பாடசாலை ஆசிரியைகளின் ஆடையால் ஏற்பட்ட குழப்ப நிலை - பொலிஸார் அழைப்பு
கொழும்பின் புறநகர் பகுதியான பன்னிப்பிட்டிய தர்மபால வித்தியாலயத்தில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள க.பொ.த உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டு மையத்தில் நேற்றைய தினம் குழப்பநிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.
விடைத்தாள்களை மதிப்பிடுவதற்காக வந்த ஆசிரியர்கள் சிலர் கவுன் அணிந்து வந்ததால் அவர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் இவ்வாறு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
நேற்று பாடசாலை நாள் என்பதால், புடவை அணிந்து வரவேண்டிய நிலையில் அவர்கள் கவுன் அணிந்து வந்ததால், பாடசாலை அதிபர், அவர்கள் பாடசாலைக்குள் நுழைவதற்கான அனுமதியை மறுத்துள்ளார்.
விடைத்தாள் மதிப்பீடு
மதிப்பீட்டு மையத்தின் கட்டுப்பாட்டில் பரீட்சை ஆணையம் இருப்பதால், இதில் அதிபருக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என விடைத்தாள்களை மதிப்பீடு செய்ய வந்த ஆசிரியர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும், பாடசாலைக்கென ஒழுக்கம் இருப்பதாகவும், பாடசாலைக்கு வரும் அனைவரும் அதைப் பின்பற்ற வேண்டும் எனவும் அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இரு குழுக்களுக்கும் இடையே சில வாக்குவாதங்கள் ஏற்பட்டுள்ளன. அதைக் கட்டுப்படுத்த பொலிஸாரை அழைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பரீட்சை ஆணையாளர்
இருப்பினும், இரு தரப்பினரும் ஒரு உடன்பாட்டை எட்ட முடியாததால், பரீட்சை ஆணையாளர் நாயகம் பரீட்சை மையத்தை தற்காலிகமாக மூடுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தரவிடம் வினவிய போது இன்று கலந்துரையாடல்களின் பின்னர் இது தொடர்பான முடிவு எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மனைவியை பிரிந்ததில் சந்தோஷம் தான்... இரண்டாம் திருமணம் குறித்து நடிகர் பார்த்தீபன் ஓபன் டாக்! Manithan
சாப்பிட்ட KFC எலும்பு துண்டுகளை தானமாக வழங்கிய கொடுஞ்செயல்: இன்ஸ்டா பிரபலத்திற்கு ரூ. 9.2 லட்சம் அபராதம் News Lankasri
சூப்பர் சிங்கர் 11 புகழ் சரண் ராஜாவா இது, ஹேர் ஸ்டைல் மாற்றி ஆளே மாறிவிட்டாரே.... செம லுக் பாருங்க Cineulagam
ஜேர்மனியை பிரித்தானியா முதலான நாடுகளுடன் இணைக்கும் புதிய எரிவாயுக்குழாய் திட்டம் துவக்கம் News Lankasri