நீடிக்கும் பதற்றம்! மூடப்பட்டுள்ள வான்பரப்புகள்: இலங்கையிலும் பல விமானங்கள் இரத்து
புதிய இணைப்பு
மத்திய கிழக்கில் நிலவும் இராணுவ சூழ்நிலை காரணமாக இன்றும், நாளையும் இரவு 11.59 மணி வரை பல விமானங்களை நிறுத்த ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.
கட்டுநாயக்காவிலிருந்து துபாய், ரியாத், தோஹா மற்றும் தம்மம் செல்லும் பல விமானங்களும் இதில் அடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு
பயணிகள் தங்கள் விமானங்களின் நிலை குறித்த புதுப்பிக்கப்பட்ட தகவலுக்கு www.srilankan.com என்ற இணையதளத்தை பார்க்கலாம் என்று ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவிக்கின்றது.

மேலும், உதவி தேவைப்படும் பயணிகள் 1979 அல்லது 0094 11 777 1979 என்ற எண்ணையும் அழைக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் தகவலுக்கு, அருகிலுள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் அலுவலகம் அல்லது டிக்கெட் வாங்கிய பயண முகவரைத் தொடர்பு கொள்ளவும் என்று அறிவுறுத்தியுள்ளது.
முதலாம் இணைப்பு
மத்திய கிழக்கில் நடந்து வரும் போருக்கு மத்தியில், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் இன்று (07) மற்றும் நாளை (08) திட்டமிடப்பட்ட பத்து விமானங்களை இரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
இவ்வாறு இரத்து செய்யப்பட்டுள்ள விமானங்களின் விபரம் பின்வருமாறு,
விமானங்களின் விபரம்
UL225 கொழும்பு-துபாய்
UL265 கொழும்பு-ரியாத்
UL217 கொழும்பு-தோஹா
UL253 கொழும்பு-தம்மம்
UL229 கொழும்பு-குவைத்
UL226 துபாய்-கொழும்பு
UL218 தோஹா-கொழும்பு
UL254 தம்மம்-கொழும்பு
UL230 குவைத்-கொழும்பு
UL231 கொழும்பு-துபாய் (மார்ச் 8)
இதற்கிடையில், 1979 அல்லது 011- 7771979 என்ற எண்ணை அழைப்பதன் மூலமோ அல்லது உங்கள் பயண முகவரைத் தொடர்புகொள்வதன் மூலமோ கூடுதல் தகவல்களைப் பெறலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri