ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்திற்கு ஏற்பட்ட சிக்கல் - காப்பற்றப்பட்ட பயணிகள்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து நேற்று அதிகாலை 01.45 மணிக்கு சிங்கப்பூர் நோக்கி பயணமான UL-306 என்ற ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டது.
101 பேருடன் பயணித்த குறித்த விமானம், இந்தோனேசியாவின் மேடன் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்ட போதும், அந்நாட்டு அதிகாரிகள் பொறுப்பற்ற வகையில் செயற்பட்டதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
A320 விமானம் சிங்கப்பூர் செல்லும் வழியில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டது. விமானத்தை பழுது பார்க்க மேடன் விமான நிலையத்தில் உள்ள விமானப் பொறியாளர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் அவர்கள் அதனை ஏற்க மறுத்துளள்னர். பழுது பார்க்க நீண்ட நேரம் எடுக்கும் எனவும் கூறியுள்ளனர்.
குடிவரவு மற்றும் குடிவரவு துறை
அதேவேளை, விமானத்திலிருந்த பயணிகளை விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல்களுக்கு அனுப்ப, மேடன் விமான நிலைய குடிவரவு மற்றும் குடிவரவு துறை அதிகாரிகளும் அனுமதிக்க மறுத்துள்ளனர்.
அத்துடன் பயணிகளை மேடன் விமான நிலையத்தில் உள்ள வேறு விமானத்திற்கு மாற்றவும் சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லவும் விமான நிலைய அதிகாரிகள் மறுத்து விட்டனர்.
இதனையடுத்து இலங்கை அரசாங்கம், இலங்கை விமான நிறுவனம் மற்றும் இந்தோனேசிய அரசு ஆகியவை ராஜதந்திர பேச்சுவார்த்தைகளை நடத்தி, பயணிகளை மேடன் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல்களுக்கு அனுப்ப நடவடிக்கை எடுத்தன.
ஸ்ரீலங்கன் விமானம்
தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்ட விமானத்தை சரி செய்ய தேவையான உதிரிப்பாகங்கள் மற்றும் விமானப் பொறியாளர்கள் குழுவை ஏற்றிக்கொண்டு, இன்று பிற்பகல் 1.45 மணிக்கு மேடன் விமான நிலையத்திற்கு மற்றொரு சிறப்பு ஸ்ரீலங்கன் விமானம் சென்றுள்ளது.
இந்தப் புதிய விமானம் மேடன் விமான நிலையத்திற்கு அருகிலுள்ள ஹோட்டல்களில் தற்போது தங்கியுள்ள பயணிகளையும் சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, இஸ்ரேலுக்கு எதிராக போருக்கு தயாராகும் நாடு - 800 ஏவுகணை தயாரிக்க சீனாவுடன் ஒப்பந்தம் News Lankasri

கனடா குடியுரிமை சட்டத்தில் பாரிய மாற்றம் - வெளிநாட்டில் பிறந்த இரண்டாம் தலைமுறைக்கும் வாய்ப்பு News Lankasri
