உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை! கல்வி அமைச்சு அறிவிப்பு
பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளவது தொடர்பில் கல்வி அமைச்சு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய பாடசாலைகளில் நிலவும் அதிபர் வெற்றிடங்களை நிரப்பவும், பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளவும் அவசியமான நடவடிக்கைகளை உடனடியாக முன்னெடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகளுக்கான பணிப்புரை
கல்வியமைச்சில் இன்று(20.05.2023) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த கலந்துரையாடலில், நாட்டில் பாடசாலை கட்டமைப்பின் தற்போதைய நிலைமை குறித்து ஆராயப்பட்டுள்ளது.
இதில் அமைச்சின் செயலாளர், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட ஏனைய அனைத்து பணிக்குழாம் அதிகாரிகள் கலந்துகொண்டிருந்தாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
you my like this video

அதிக சம்பளம் வாங்கும் வேலையை விட்டுவிட்டு ஐஏஎஸ் அதிகாரியான பெண்.., ஆனால், கிராமமே எதிர்ப்பு News Lankasri

பிரபல நடிகையுடன் தொடர்பில் இருந்தாரா நாகார்ஜூனா.. கிசுகிசுவுக்கு மனைவி அமலா கொடுத்த பதில் Cineulagam

விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒரு பயணி.., 11ஏ இருக்கையில் இருந்து தப்பித்தது எப்படி? News Lankasri
