கிழக்கு மாகாண ஆசிரியர் ஆட்சேர்ப்பு நேர்முகத் தேர்வுக்கான திகதிகள் அறிவிப்பு
கிழக்கு மாகாண ஆசிரியர் சேவை ஆட்சேர்ப்புப் போட்டி பரீட்சைக்கான நேர்முகப்பரீட்சைகளை இந்தாண்டு ஜனவரி 16,17 மற்றும் 18ஆம் திகதிகளில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு ஓகஸ்ட் 03ஆம் திகதி அன்று கிழக்கு மாகாண ஆசிரியர் சேவை ஆட்சேர்ப்புப் போட்டி பரீட்சை நடைபெற்றது.
விழிப்புணர்வு நிகழ்ச்சி
மூன்று நேர்முகப்பரீட்சை சபைகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று (15) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பேசிய ஆளுநர், எந்தவொரு தரப்பினருக்கும் அநீதி ஏற்படாத வகையில் ஆட்சேர்ப்பு செயல்முறையை நடாத்த வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர், ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ் ஆகியோரும் இதில் பங்குபற்றினர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






அமெரிக்காவின் F-47, சீனாவின் J-35, ரஷ்யாவின் Su-57... உலகின் மிகவும் மேம்பட்ட போர் விமானம் எது? News Lankasri

அதிரடியாக இந்த வாரம் மாறிய TRP ரேட்டிங் விவரம்.. டாப் 5ல் இடம்பெற்றுள்ள தொடர்கள் என்னென்ன? Cineulagam

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan
