வட மாகாண கல்வி அமைச்சின் அலுவலகம் நாளை முடக்கப்படும்! : தொண்டர் ஆசிரியர்கள் அறிவிப்பு (Video)
வடக்கு மாகாண தொண்டர் ஆசிரியர்கள் நாளையதினம் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்தின் நுழைவாயிலை மறித்து போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
வட மாகாண கல்வி அமைச்சின் அலுவலகத்தின் முன் இன்று கூடியபோதே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இன்று நாங்கள் வடமாகாண கல்வி செயலாளரை சந்தித்து எங்களுடைய தொண்டர் ஆசிரியர்கள் நியமனம் குறித்து கேட்ட போது எங்களுக்கு அப்படி ஒரு நியமனம் இல்லை என்றும் முற்று முழுதாக மறுக்கப்பட்டு விட்டது. என்ற பதிலை எங்களுக்கு அவர்கள் தந்துள்ளார்கள்.
எனவே அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், காலம் கடந்து சென்று கொண்டிருக்கின்ற நிலையில் மேலும் காலம் தாழ்த்தாமல் உரிய நியமனங்களை எங்களுக்கு வழங்குமாறு கோரியும் தொண்டர் ஆசிரியர்கள் ஆகிய நாங்கள் நாளை கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் என தெரிவித்துள்ளனர்.





தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

மனோஜை துடைப்பக்கட்டையால் ரவுண்டு கட்டி அடித்த பெண்கள், அப்படி என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை கலகலப்பு புரொமோ Cineulagam

ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை முழுமையாக நிறுத்திய ஜேர்மனி - அரசியல் மாற்றத்திற்கு அடையாளம் News Lankasri
