வெளிநாட்டில் இருந்து இலங்கை வந்த ஆசிரியர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த வெளிநாட்டு பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொக்கையின் போதைப்பொருளை இலங்கைக்கு கொண்டு வந்த வெளிநாட்டவரை, சுங்க போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் 59 வயதான பிரேசில் நாட்டை சேர்ந்த ஆசிரியர் என தெரியவந்துள்ளது.
போதைப்பொருள்
240 மில்லியன் ரூபா பெறுமதியான 4 கிலோகிராம் 855 கிராம் கொக்கையின் பிரேசிலில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது.
இவை அட்டைப் பெட்டியில் ஒட்டப்பட்டு, கறுப்பு காகிதத்தால் மூடப்பட்டு அவரது சூட்கேஸில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயண பொதி
சந்தேக நபர் பிரேசிலில் இருந்து கட்டார் சென்று, இன்று அதிகாலை 2.40 மணிக்கு டோஹாவிலிருந்து கத்தார் ஏர்வேஸ் விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் பொதியை, பயணியுடன் சேர்த்து, கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியக அதிகாரிகளிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குடும்பத்தினருக்கு பேரதிர்ச்சி கொடுக்கும் உண்மையை கூறிய அரசி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு புரொமோ Cineulagam

படங்களில் வில்லன் வாழ்க்கையில் ஹீரோ.. கோட்டா ஶ்ரீனிவாச ராவ் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? Manithan

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

பிரித்தானியாவில் புறப்பட்ட சிறிது நேரத்தில் வெடித்துச் சிதறிய விமானம்! உள்ளே இருந்தவர்களின் கதி? News Lankasri

பிடிவாதத்தால் எதையும் சாதிக்கும் பெண் ராசியினர் இவர்கள் தான்... உங்க ராசியும் இதுல இருக்கா? Manithan
