பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு குறித்த வர்த்தமானி அறிவித்தல் இரத்து
தோட்டத் தொழிலாளர்களுக்கான 1,700 ரூபாய் சம்பள அதிகரிப்புக்கான முன்னைய வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
தொழில் அமைச்சினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சம்பளச் சபையின் ஊடாக கொடுப்பனவுகளை வழங்குவதற்கான புதிய வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
1700 ரூபா
இதன்படி, பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளமான 1700 ரூபாவை சம்பளச் சபையின் ஊடாக வழங்குவதற்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.
கடந்த மே மாதம் 1ம் திகதி பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 1700 ரூபாவாக உயர்த்துவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தார்.
தோட்டத் தொழிலாளி ஒருவரின் குறைந்தபட்ச நாளாந்த சம்பளம் 1700 ரூபாவாக நிர்ணயித்து தொழில் அமைச்சர் முன்னதாக வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டிருந்தார்.
தொழில் அமைச்சு
1,350 சம்பளப்பணமாகவும், உதவித் தொகையாக 300 ரூபாவாகவும், மற்றும் மற்றொரு உதவித்தொகை 50 ரூபாவாகவும் வழங்கப்பட வேண்டும் என வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எவ்வாறாயினும், தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச நாளாந்த சம்பளத்தை நிர்ணயித்து தொழில் அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக 21 தோட்ட நிறுவனங்கள் மனு தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

அமெரிக்காவின் F-47, சீனாவின் J-35, ரஷ்யாவின் Su-57... உலகின் மிகவும் மேம்பட்ட போர் விமானம் எது? News Lankasri

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam
