12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ள இந்திய நிறுவனம்! அதிர்ச்சியில் ஊழியர்கள்
இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் சேவை நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) முக்கிய அறிவிப்பொன்றை விடுத்துள்ளது.
அதன் ஊழியர்களில் 2 சதவீதம் பேரை, அதாவது சுமார் 12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது.
தொழில்நுட்பத்தில் ஏற்படும் விரைவான மாற்றங்களைச் சமாளிக்க, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பணிநீக்கம்
பணிநீக்க செயல்முறை 2025 ஏப்ரல் முதல் 2026 மார்ச் வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தான் எடுத்த மிகக் கடினமான முடிவுகளில் இதுவும் ஒன்று என்று டிசிஎஸ் தலைமை நிர்வாக அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.
இது நடுத்தர மற்றும் மூத்த நிலை ஊழியர்களுக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
புதிய தொழில்நுட்பங்கள், குறிப்பாக செயற்கை நுண்ணறிவில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக இந்த முடிவை எடுக்க வேண்டியிருந்தது என்றும் தெரிவித்துள்ளார்.





தமிழ் இன அழிப்பை கட்டமைத்துள்ள இலங்கை அரசாங்கம் 1 மணி நேரம் முன்

ஐரோப்பிய ஒன்றியத்தின் புதிய பொருளாதாரத் தடை - இந்திய நிறுவனமும், இந்திய வம்சாவளி கேப்டனும் நேரடி பாதிப்பு News Lankasri

சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri
