வெளிநாடொன்றில் மரண தண்டனையை எதிர்நோக்கவுள்ள தமிழர்? அரசு தரப்பு விளக்கம்
சிங்கபூரில் வசிக்கும் தமிழர் ஒருவருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை குறித்து அந்நாட்டு அரசாங்கம் விளக்கமளித்துள்ளது.
சிங்கப்பூரில் ஹெரோயின் போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நாகேந்திரன் கே தர்மலிங்கம் என்பவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில்,இறுதி நேரத்தில் தண்டனை ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
42.72 கிராம் ஹெரோயின் கடத்தியதற்காக, நாகேந்திரன் கே தர்மலிங்கம் என்பவருக்கு கடந்த 2010ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதற்கமைய,நவம்பர் 10 ஆம் திகதி அவருக்கான மரண தண்டனை திட்டமிடப்பட்ட நிலையில்,அதற்கு பல எதிர்ப்புகள் கிளம்பியிருந்தது.
மரண தண்டனை தொடர்பிலான விசாரணைக்கு நீதிமன்றில் இருந்து அழைத்து செல்லப்பட்ட பின்னர் அவருக்கு கோவிட் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீதிபதி அறிவித்திருந்தார்.
குற்றவாளிக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளதால் மரண தண்டனையை நிறைவேற்றுவது சரியல்ல எனக் கூறப்பட்ட நிலையில், மரண தண்டனைக்கு எதிரான விசாரணையை பின்னொரு திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில்,இந்த வழக்கு குறித்து மலேசியா பிரதமர் இஸ்மாயில் மற்றும் வெளியுறவு துறை அமைச்சர் டத்தோ சயிஃபுதீன் ஆகியோர் கடிதமொன்றினை அனுப்பி வைத்து விளக்கமளித்துள்ளனர்.
குறித்த கடிதத்தில்,போதை வழக்கில் கைது செய்யப்பட்ட நாகேந்திரனுக்கு நியாயமான முறையில் தான் மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் முறையான விசாரணை நடைபெற்றது.
சிங்கப்பூர் சட்டத்தின் கீழ் அனைத்து வித நடைமுறைகளும் உரிய முறையில் பின்பற்றதாகவும் அந்த கடிதத்தில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
