யாழில் தனியார் வைத்தியசாலையின் செயற்பாடு : பாராட்டும் தமிழார்வலர்கள்
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றின் செயற்பாடுகள் தொடர்பில் தமிழார்வலர்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
உலகில் அதிக அளவில் மொழிபெயர்க்கப்பட்ட நூல்களில் ஒன்றாக விளங்கும் திருக்குறளுக்கு முன்னுரிமை வழங்கப்படிருப்பதை பாராட்டியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.
வரவேற்பிடம்
யாழ் பல்கலைக்கழகத்திற்கு அண்மையில் அமைந்துள்ள இந்த தனியார் வைத்தியசாலையின் வரவேற்பு மண்டபத்தில் நந்தியின் சிற்பம் வைக்கப்பட்டுள்ளது.
நந்தி வைக்கப்பட்டுள்ள மேடையின் முகப்பில் திருவள்ளுவர் உருவம் பொறிக்கப்பட்டு, நோய் மருத்துவம் பற்றி பேசும் திருக்குறள் ஒன்றும் பதிவிடப்பட்டுள்ளது.
அத்திருக்குறளிற்கான பொருளும் பொறிக்கப்பட்டு இருப்பது வரவேற்கப்பட வேண்டிய விடயமாகும் என இதனை அவதானித்த ஓய்வுபெற்ற தமிழாசிரியர் குறிப்பிடுகின்றார்.
"நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்".
பொருள்:- நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்.
நல்ல முயற்சி
இத்தகைய இடங்கள் போல் அமையும் எல்லா இடங்களிலும் மொழிக்கு முன்னுரிமை கொடுக்கும் வகையில் மொழி வளம் நிறைந்த இலக்கிய வாசகங்களை மக்கள் பார்வைக்காக இதுபோல் காட்சிப்படுத்தல் வேண்டும்.
நீதி நூல்களை அறிந்து கொள்ள மக்களுக்கு இவ்வாறான வாய்ப்புகள் அவசியமாகும் காலமாக இன்றைய சூழல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |