தந்தை செல்வநாயகத்தின் 47ஆவது நினைவு தினம் : தமிழரசு கட்சியின் எழுச்சிக் கூட்டம்
இலங்கை தமிழரசு கட்சியின் திருகோணமலை (Trincomalee) மாவட்ட கிளையினால் தந்தை செல்வநாயகத்தின் 47ஆவது நினைவு நாளை முன்னிட்டு நினைவு எழுச்சி கூட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.
இக்கூட்டமானது, இன்று (27.04.2024) திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.
விசேட கூட்டம்
இலங்கை தமிழரசு கட்சியின் மாவட்ட தலைவர் ச.குகதாசன் (Gugadasan) நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கியுள்ளார்.
மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்களான எஸ். சிறீதரன் (Sridharan), எம்.ஏ.சுமந்திரன் (Sumandran) மற்றும் இரா.சாணக்கியன் (Chanakyan) உட்பட கட்சி ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |