நாட்டை சுற்றி சைக்கிளில் பயணம் செய்த தமிழ் இளைஞன்
மட்டக்களப்பு பழுகாமத்தில் வசிக்கும் பாலச்சந்திரன் நிரோஜன் என்ற இளைஞன் துவிச்சக்கர வண்டியில் ஆயிரத்து 264 கிலோ மீற்றர் தூரம் தனியாக நாடு முழுவதும் பயணம் செய்துள்ளார்.
ஒன்பது நாட்கள் தனியாக நாடு முழுவதும் பயணம் செய்து அவர் தனது பயணத்தை நிறைவு செய்துள்ளார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் திகதி தனது சொந்த ஊரான பழுகாமத்தில் பயணத்தை ஆரம்பித்த அவர், நாடு முழுவதும் பயணம் செய்து விட்டு, புறப்பட்ட இடத்திற்கு வந்து 2023 ஜனவரி 5 ஆம் திகதி தனது பயணத்தை நிறைவு செய்துள்ளார்.
மட்டக்களப்பு பழுகாமத்தில் இருந்து புறப்பட்ட நிரோஜன், சேருவில்,முல்லைத்தீவு,யாழ்ப்பாணம், மன்னார்,புத்தளம்,கொழும்பு, மாத்தறை, கதிர்காமம் வழியாக மீண்டும் பழுகாமத்தை சென்றடைந்துள்ளார்.