வடக்கில் பொலிஸ் நிலையங்களுக்கு தமிழ் இளைஞர், யுவதிகள் இணைப்பு!
வட மாகாணத்தின் பொலிஸ் நிலையங்களுக்கு தமிழ் மொழி தெரிந்த இளைஞர், யுவதிகளை, இணைத்துக் கொள்ளுவதற்கு பொலிஸ் தலைமையகம் முழுமையான அர்ப்பணிப்புடனான சேவையினை எதிர்காலத்தில் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் ஊடாக தமிழ் மொழி இளைஞர், யுவதிகள் பொலிஸ் நிலையத்தில் முழுமையான பங்களிப்பினை வழங்க எதிர்காலத்தில் ஒன்றிணைய வேண்டும்.
இது காலத்தின் கட்டாயமாக காணப்படுகின்றது என பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர்,
சுதந்திரமான ஜனநாயக ரீதியான நாட்டில் இன ஐக்கியத்தினையும் சமூக ரீதியான வலுவான கட்டமைப்பினை உருவாக்கவும் எதிர்பார்த்துள்ளோம்.
தமிழ் மொழியில் இணைத்துக்கொள்ளும் போது தமது சொந்த மாவட்டங்களில் விண்ணப்பங்களை சமர்ப்பித்த மாவட்டங்களிலே கடமைபுரியவும் உள்ளனர்.
குறிப்பாக கடந்த சில ஆண்டுகளின் 10 ஆயிரம் இளைஞர்கள், யுவதிகள் பொலிஸ் ஆட்சேர்ப்பு இணைப்பில் இணைத்துக் கொண்டோம். அதன் பின்னர் எதிர்வரும் 2023ஆம் ஆண்டு காலப்பகுதிக்குள் 24 ஆயிரம் நபர்களை சேவையில் இணைக்க எதிர்பார்த்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.