தமிழ் இளைஞர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கு இரகசிய நகர்வு (Video)
தமிழ் இளைஞர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கு இரகசிய நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இலங்கையில் இருக்கும் புலனாய்வுச் செய்தியாளரும், அரசியல் ஆய்வாளருமான எம்.எம்.நிலாம்டீன் தெரிவித்துள்ளார்.
யுக்திய நடவடிக்கை தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.
இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புலனாய்வுப்பிரிவுடன் மிக நெருங்கிய நிலையில் செயற்பட்டு வருகின்றார்.
ஜனாதிபதி தேர்தலை இலக்குவைத்து அரசுக்கு எதிராக நாட்டில் முன்னெடுக்கப்படவுள்ள கிளர்ச்சியை கட்டுப்படுத்தவே ஜனாதிபதி இந்த யுக்திய நடவடிக்கைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
போதைப்பொருள் பாவனைக்கு எதிராக யாழில் பொலிஸார் முன்னெடுக்கும் நடிவடிக்கை பெரும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது ஊடறுப்பு நிகழ்ச்சி,
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam
எந்த சாக்குபோக்கும் சொல்ல முடியாது: பாகிஸ்தானுக்கு எதிராக படுதோல்வி குறித்து இலங்கை கேப்டன் News Lankasri