கனடாவில் தமிழ் இளைஞர் ஒருவர் ஆயுதங்களுடன் கைது!
கனடா - ரொரோண்டோவில் தமிழ் இளைஞர் ஒருவர் பெருமளவு போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 26 வயதான ருக்ஷான் அருள்ராஜா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
வாடகை கார் ஓட்டுநனர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். இளைஞரை கைது செய்யும் வகையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளனர்.
ருக்ஷான் அருள்ராஜா மீது தடை செய்யப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்தமை, கொக்கெய்ன் போதைப்பொருள் வைத்திருந்தமை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் அந்நாட்டு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
விஜயின் தமிழகத் தேர்தல் வெற்றியும் இலங்கைத் தீவின் பிரதிபலிப்புகளும்..! 17 மணி நேரம் முன்
சிறையில் கதிர்.. கண்விழித்த முத்துவேல் போலீசிடம் என்ன கூறினார்? பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 அடுத்த வார ப்ரோமோ Cineulagam
சூர்யாவின் திரை வாழ்க்கையில் இதுவரை நடக்காத விஷயம்.. தமிழக வசூலில் கருப்பு திரைப்படம் ருத்ரதாண்டவம் Cineulagam