மலேசியாவில் கொடூரமாக அடித்துக்கொல்லப்பட்ட தமிழர்! மனைவி விடுத்துள்ள உருக்கமான கோரிக்கை (VIDEO)

Srilanka Malasia Gotapaya Batticalo
By Kumar Dec 13, 2021 11:10 PM GMT
Report

கடந்த ஆண்டு மலேசியாவில் அடித்துக்கொல்லப்பட்ட தனது கணவனுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் முன்வர வேண்டும் என மனைவி கோரிக்கை விடுத்துள்ளார்.

06-09-2020ஆம் திகதி மலேசியாவில் கணபதிப்பிள்ளை விவேகானந்தன் என்னும் குடும்பஸ்தர் அந்நாட்டவர்களினால் அடித்துக்கொல்லப்பட்டதாகவும், இது தொடர்பில் இதுவரையில் தனக்கு எந்த நீதியும் பெற்றுக்கொடுக்கப்படவில்லையெனவும் தெரிவித்து படுகொலை செய்யப்பட்டவரின் மனைவியான  பிருந்தாஜினி விவேகானந்தன் தெரிவித்துள்ளார்.


மட்டக்களப்பில் உள்ள மட்டு.ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நாட்டில் அண்மையில் அடித்து கொல்லப்பட்டவரின் படுகொலைக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்த அவர்,இதேபோன்று தனது கணவனும் அடித்துக்கொலை செய்யப்பட்டிருந்த போதிலும் அதற்கு எதிராக யாரும் பேசுவதற்கு கூட முன்வரவில்லையெனவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.

இதன்போது கருத்து தெரிவித்த உயிரிழந்தவரின் மனைவி,

முதலில் பாகிஸ்தானில் கொடூரமாக கொல்லப்பட்டவருக்கு எனது குடும்பம் சார்பாக அவரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றேன்.அவரின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.

நான் செங்கலடியில் இருக்கின்றேன்.எனது பெயர் திருமதி பிருந்தாஜினி விவேகானந்தன்.06-09-2020 ஆம் திகதி மலேசியாவில் எனது கணவரை கொடூரமாக தாக்கி கொலை செய்திருந்தார்கள்.தகப்பனை பத்து வயதில் இழந்த மகனும்,அவனது தாயும் இன்று அது தொடர்பில் நாங்கள் பேசவந்துள்ளோம்.

எனது கணவன் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் எனக்கு எந்த விதமான உதவியோ,நீதியோ கிடைக்கவில்லை. அண்மையில் பாகிஸ்தானில் கொல்லப்பட்ட சகோதரருக்கு ஆதரவாக பலர் குரல் கொடுத்துள்ளனர்.ஆனால் எனது கணவருக்கு ஆதரவாக யாரும் ஏன் குரல் கொடுக்க முன்வரவில்லையென்ற கேள்வி எனக்குள் எழுந்துள்ளது.

நான் இங்கு இனவாதம் பேசவில்லை.பாகிஸ்தானில் கொல்லப்பட்டவர் ஓரு சிங்களவர் என்ற அடிப்படையிலா அனைவரும் குரல் கொடுத்தார்கள்.நான் வறுமை நிலையில் உள்ள பெண் என்ற காரணத்தினால் எனக்கு ஆதரவு வழங்க முன்வரவில்லையா?

இலங்கை ஜனாதிபதியிடம் நான் கையெடுத்து கும்பிட்டு கேட்கின்றேன்.எனது கணவருக்கு ஏற்பட்ட அநீதிக்கு எனக்கு நீதி கிடைக்க வேண்டும்.அன்று எனக்கு ஆதரவினை வழங்கியிருந்தால் இன்று பாகிஸ்தானில் அந்த அண்ணாவுக்கு எதுவும் நடந்திருக்காதது.அன்று அதற்கான நடவடிக்கையினை எடுத்திருந்தால் இலங்கையினை சேர்ந்த எவரையும் தொடுவதற்கு அச்சப்பட்டிருப்பார்கள்.

எனது கணவனின் உடலை நான் மலேசியாவிலிருந்து இலங்கைக்கு எடுப்பதற்கு உலக நாடுகளில் உள்ள உறவுகளிடம் பிச்சையெடுத்தே அவரின் சடலத்தினைக்கொண்டு வந்தேன்.

எனது மகன் மூன்று வயதாக இருக்கும்போது தொழிலுக்காக மலேசியாவுக்கு சென்றவர்.பெட்டியில் சாமான்கள் அனுப்புகின்றேன் என்று கூறிவிட்டுச் சென்றவர் இறுதியாக கணவன் பெட்டியில் வந்திருக்கின்றார் என்று காட்டினார்கள்.

வீட்டுக்கு கூட கொண்டு வர முடியாமல் கொழும்பில் இறுதிச்சடங்கினை செய்தோம். ஆனால் எனது கணவனின் உடலத்தில் இனவாதத்தினை காட்டாமல் அனைத்து மதத்தவர்களும் வருகை தந்து தொட்டு தூக்கி அடக்கம் செய்ய உதவினார்கள்.அதன் காரணமாக நான் இங்கு இனவாதத்தினை தூண்டவோ,அது தொடர்பில் கதைக்கவோ வரவில்லை.பாகிஸ்தானில் அவருக்கு நடைபெற்றது.

பாரிய அநீதி,அதேபோன்ற அநீதி எனக்கும் ஏற்பட்டது.அவரின் மனைவி எவ்வாறு இருக்கின்றாரோ அதேபோன்று நானும் 28 வயதில் கணவனை இழந்து பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டு வருகின்றேன்.

பாகிஸ்தானில் இடம்பெற்ற சம்பவத்திற்கு பாகிஸ்தான் அரசாங்கம் மன்னிப்புக்கூட கேட்டுள்ளது.ஆனால் எனக்கு எந்தவிதமான ஆதரவும் கிடைக்கவில்லை.எனது கணவனை கொலை செய்தவர்கள் யார் என்பது கூட தெரியாத நிலையுள்ளது.

எனது கணவனின் படுகொலைக்கு எனக்கு நீதி வேண்டும்.எனக்கு வழங்கப்படும் நீதியானது இலங்கையின் ஒவ்வொரு பெண்ணுக்கும் நீதியைப்பெற்றக்கொடுக்கும்.

நான் ஒரு ஏழையென்ற நிலையில் இலங்கை அரசாங்கம் கவனிக்காத காரணத்தினால் தான் இன்று ஒரு அண்ணா பாகிஸ்தானில் கொல்லப்பட்டிருக்கின்றார்.அன்று இதற்கான நடவடிக்கை எடுத்திருந்தால் இலங்கையரை தொட்டால் இலங்கையே துடிக்கும் என்ற அச்சம் ஏனைய நாடுகளில் உள்ளவர்களுக்கு ஏற்பட்டிருக்கும்.

எனது கணவர் உல்லாசத்திற்காக வெளிநாடு செல்லவில்லை.வீட்டில் இருந்த கஸ்டம்,கடனை அடைப்பதற்காகவே சென்றார்.இன்று கூட அந்த கடனிலிருந்து மீளமுடியாத நிலையில் நாங்கள் உள்ளோம். எனது கணவனின் கொலை தொடர்பில் மலேசியா அரசாங்கமும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,எனக்கு எந்த அறிவிப்பினையும் தரவில்லை.

இலங்கை ஜனாதிபதிக்கும் நான் கடிதம் எழுதியிருந்தேன்.ஆனால் யாரும் எந்த உதவியும் செய்யவில்லை. நான் ஏழையென்ற காரணத்தினாலேயே யாரும் குரல்கொடுக்கவும் ஆதரவு வழங்கவும் முன்வரவில்லை.பணம் படைத்தவர்களுக்கு பிரச்சினையென்றால் பலர் குரல் கொடுக்கின்றனர்.நீதிகோருகின்றனர்.

என்னுடைய நிலையில் பல பெண்கள் இருக்கின்றனர்.இவ்வாறே அமைதி காத்தால் எந்த நாட்டிலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம்.எமது பிரச்சினைக்காக அன்று இந்த ஊடகங்கள் குரல் கொடுத்திருந்தால் பாகிஸ்தானில் இன்று அந்த சம்பவம் நடந்திருக்காது.

எனது கணவனின் உடல் இங்கும் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்டது. மூளை உட்பட பல உடற்பாகங்கள் இல்லாத நிலையேயிருந்தது.இங்கும் பிரேத பரிசோதனை அறிக்கையில் அடித்துக்கொலை செய்யப்பட்டதாகவேயிருந்தது.

எனவே எனது கணவனின் கொலைக்கு இலங்கை அரசாங்கம் எனக்கு நீதியைப்பெற்றத்தர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.


GalleryGalleryGalleryGallery
மரண அறிவித்தல்

அச்சுவேலி, யாழ்ப்பாணம், Montreal, Canada

09 Dec, 2025
மரண அறிவித்தல்

ஒட்டகப்புலம், Bremen, Germany

09 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொழும்பு, Toronto, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Brampton, Canada

10 Dec, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, உரும்பிராய்

16 Dec, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

15 Dec, 2020
மரண அறிவித்தல்

சுதுமலை, பண்ணாகம்

15 Dec, 2025
நன்றி நவிலல்

சாவகச்சேரி, Neuilly-Plaisance, France

15 Nov, 2025
நன்றி நவிலல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

15 Dec, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Watford, United Kingdom

16 Dec, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, பிரான்ஸ், France

17 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Tillsonburg, Canada

14 Dec, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இணுவில் கிழக்கு, Mississauga, Canada

14 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Montreal, Canada, Laval, Canada

14 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மருதனாமடம்

14 Dec, 2020
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, அளவெட்டி

15 Dec, 2015
மரண அறிவித்தல்

நயினாதீவு 5ம் வட்டாரம், நயினாதீவு 2ம் வட்டாரம், கோண்டாவில், Toronto, Canada, Montreal, Canada, London, United Kingdom

04 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், கொழும்பு, யாழ்ப்பாணம், மிருசுவில், கனடா, Canada

14 Dec, 2020
மரண அறிவித்தல்

உரும்பிராய் தெற்கு, Trappes, France

07 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, செட்டிக்குளம்

15 Dec, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Mississauga, Canada

11 Dec, 2025
மரண அறிவித்தல்

வெள்ளவத்தை, கொல்லங்கலட்டி, Jaffna, யாழ்ப்பாணம், Markham, Canada

12 Dec, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி, Hatton, அவுஸ்திரேலியா, Australia

17 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம், கனடா, Canada

17 Nov, 2022
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, சென்னை, India

14 Dec, 2019
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Hayes, United Kingdom

03 Dec, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், Montreal, Canada, Toronto, Canada

14 Dec, 2021
நன்றி நவிலல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US