அவுஸ்திரேலியாவில் தமிழ் அகதி ஒருவர் மரணம்!
அவுஸ்திரேலியாவில் 35 தமிழ் இளைஞர் ஒருவர் இன்று காலை உயிரிழந்துள்ளதாக தமிழ் ஏதிலிகள் கழகத்தின் பேச்சாளர் அரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார்.
மெல்பன் Thomastown-ஐச் சேர்ந்த தனேஸ்குமார் புத்திசிகாமணி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனேஸ்குமார் தற்காலிக பாதுகாப்பு விசாவுடன் மெல்பனில் வாழ்ந்துவந்ததாகவும், உற்பத்தி துறையில் பணிபுரிந்த இவர்கோவிட் பரவலையடுத்து வேலையை இழந்திருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நீண்ட நாட்களாக குடும்பத்தை விட்டு பிரிந்து இருந்தமை, மற்றும் எதிர்காலம் குறித்த அச்சம் போன்றவற்றின் கூட்டுவிளைவாக ஏற்பட்ட மனஅழுத்தம் காரணமாக, இவர் உயிரிழந்திருக்கலாம் என அரன் மயில்வாகனம் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்குள் அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்கள் மத்தியில் இவ்வாறான பல மரணங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அரசின் இறுக்கமான அகதிகள் கொள்கை அவர்களை மனதளவில் கடுமையாக பாதித்துவருவதாகவும் அரன் மயில்வாகனம் கூறியுள்ளார்.
இதேவேளை தனேஸ்குமாரின் இறுதிநிகழ்வுகளை நடத்துவதற்கான நிதிசேகரிப்பில் தமிழ் ஏதிலிகள் கழகம் ஈடுபட்டுள்ளதாகவும் அரன் மயில்வாகனம் மேலும் தெரிவித்துள்ளார்.
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam