இலங்கையில் தமிழின அழிப்பிற்கான செயற்பாடுகளில் எந்த தளர்வும் இல்லை: தமிழ் சிவில் சமூக அமையம்

Sri Lankan Tamils Independence Day University of Jaffna Sri Lankan Peoples Sri Lankan political crisis
By Chandramathi Jan 31, 2023 05:53 PM GMT
Chandramathi

Chandramathi

in அரசியல்
Report

இலங்கையின் சுதந்திர தினமான பெப்ரவரி 4ஆம் திகதியைக் கரி நாளாக பிரகடனப்படுத்தும் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரின் முடிவுக்கு நாம் எமது ஆதரவை தெரிவிக்கின்றோம் என தமிழ் சிவில் சமூக அமையம் மற்றும் அடையாளம் கொள்கை ஆய்வுக்கான நிலையம் தெரிவித்துள்ளன.

பௌத்த சிங்கள தேசத்திடம் தாரை வார்த்த கரி நாள்

அறிக்கை ஒன்றின் ஊடாக இதனை தெரிவித்துள்ளன.

அந்த அறிக்கையில்,உண்மையில் இத்தீவின் வடக்கு கிழக்கை தாயகமாகக் கொண்ட தமிழ்த் தேசத்தை ஆக்கிரமித்திருந்த ஆங்கிலேயர் தாம் கொண்டிருந்த ஆக்கிரமிப்பு மேலாதிக்கத்தை இத்தீவின் இன்னொரு தேசமாகிய பௌத்த சிங்கள தேசத்திடம் தாரை வார்த்த கரி நாளாகவே பெப்ரவரி 4ஆம் திகதியை நாம் கருதுகின்றோம்.

இலங்கையில் தமிழின அழிப்பிற்கான செயற்பாடுகளில் எந்த தளர்வும் இல்லை: தமிழ் சிவில் சமூக அமையம் | Tamil Rally Intensifies Uoj Student

1931 ஆம் ஆண்டில் ஆங்கிலேயரால் பொறுப்பாட்சி வழங்கப்பட்ட காலத்தில் இருந்து தொடங்கிய சிங்கள பௌத்த தேசத்தின் தமிழினத்தின் மேலான இனவழிப்பு நடவடிக்கைகள் 1948 பெப்ரவரி 4ஆம் திகதி முதல் முழு அதிகாரங்களுடன் தீவிரமடைய தொடங்கியது.

இன்றுவரை இரண்டு லட்சத்துக்கும் மேலான தமிழ் மக்களைக் கொன்றும், பத்து இலட்சத்திற்கும் அதிகமானவர்களை புலம்பெயர வைத்தும், பல்லாயிரம் தமிழர்களை காணாமல் போகச் செய்தும் பல நூறு தமிழர்களை பல்லாண்டுகளாக சிறைகளில் அடைத்தும் வைத்துள்ளனர்.

தனிச் சிங்கள சட்டம்

இதேவேளை தமிழர்களின் தாயகத்தில் பல ஆயிரம் சதுர கிலோ மீட்டர் நிலங்களை குடியேற்றமுற்பட பலவழிகளிலும் அபகரித்தும் தமிழர்களின் பல ஆயிரம் கோடி செல்வங்களை அழித்ததும் மட்டுமல்லாது தனிச் சிங்களச்சட்டம், கல்வியில் தரப்படுத்தல், வேலைவாய்ப்புகளில் பாரபட்சம், அபிவிருத்தியில் புறக்கணிப்பு என ஒரு நாடு என தாங்கள் கூறிக் கொள்ளும் இத்தீவில் தமிழர்களை தொடர்ச்சியாக ஓரம் கட்டியும் வந்துள்ளது சிங்கள பௌத்த தேசம்.

இலங்கையில் தமிழின அழிப்பிற்கான செயற்பாடுகளில் எந்த தளர்வும் இல்லை: தமிழ் சிவில் சமூக அமையம் | Tamil Rally Intensifies Uoj Student

சிங்கள பௌத்த தேசம் இன்றும் அதே பாதையில் தான் தொடர்ந்து கொண்டு இருக்கின்றது.

ஆங்கிலேயர் வெளியேறிய பின், கடந்த 75 ஆண்டுகள் முழுவதும் தமிழின அழிப்பில் தனது பெருமளவு கவனத்தையும் பெரும்பாலான வளங்களையும் குவித்ததன் மூலம் எம்மை அழித்து பலவீனமாக்கியது.

அதுமட்டுமல்லாது இலங்கை இன்று தானும் பொருளாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு என்பவற்றில் பேரழிவைச் சந்தித்து நிற்கின்றது.

ஆனாலும் இந்த நிலையிலும் கூட, இன்றும் தமிழின அழிப்பிற்காக, தான் தேர்ந்த எந்தவொரு செயற்பாடுகளிலும் இலங்கை சிறிதளவேனும் தளர்வை ஏற்படுத்தாமல் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றது.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு

இலங்கையில் தமிழின அழிப்பிற்கான செயற்பாடுகளில் எந்த தளர்வும் இல்லை: தமிழ் சிவில் சமூக அமையம் | Tamil Rally Intensifies Uoj Student

தொடர்ந்து வந்த இலங்கை அரசுகள் காலங்காலமாக தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்போம் எனக்கூறி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்ட வண்ணம் எம்மை ஏமாற்றியது.

மேலும் அக்காலங்களை தமிழர்களின் அடையாளங்களை அழிக்கவும் இனவழிப்புக்கு எதிரான எமது போராட்டங்களை வலுவிழக்கச் செய்வதற்கும் பயன்படுத்துவதை தனது தந்திரோபாயமாகவும் கொண்டுள்ளது.

இன்று இலங்கை அரசு மீண்டும் ஒரு தடவை பேச்சுவார்த்தை என்று இனவழிப்பைத் தொடர்வதற்கான கால அவகாசத்தை பெறுவதற்கும் ஈற்றில் எம்மை ஏமாற்றுவதற்கும் முயன்று நிற்கின்றது.

இந்நிலையில் இலங்கையின் சுதந்திர தினம் உண்மையில் தமிழர்களின கரி நாள் என்பதே தமிழ்த் தேசத்தின் யதார்த்தமாகும்.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முன்னெடுத்துள்ள இப்போராட்டத்திற்கு எமது பூரண ஆதரவைத் தெரிவித்து நிற்கின்றோம்.”என தெரிவிக்கப்பட்டுள்ளது.   

10ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
கண்ணீர் அஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, Villeneuve-Saint-Georges, France

20 Sep, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில், Wembley, United Kingdom

13 Sep, 2025
மரண அறிவித்தல்

திருநெல்வேலி கிழக்கு, Paris, France

10 Sep, 2025
மரண அறிவித்தல்

மதவுவைத்தகுளம், பாவற்குளம், கரம்பைமடு

16 Sep, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பரிஸ், France

17 Sep, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், தண்ணீரூற்று, St. Gallen, Switzerland

18 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Toronto, Canada

28 Sep, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில், Vaughan, Canada

19 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வடலியடைப்பு, Toronto, Canada

14 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, Kokuvil, Scarborough, Canada

16 Sep, 2025
மரண அறிவித்தல்

கோப்பாய், Montreal, Canada

12 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Ikast, Denmark, Toronto, Canada

17 Sep, 2021
மரண அறிவித்தல்

வசாவிளான், Jaffna, Scarborough, Canada

13 Sep, 2025
35ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

செட்டிக்குளம், Vitry-sur-Seine, France

13 Sep, 2025
மரண அறிவித்தல்

நவாலி தெற்கு, Zürich, Switzerland

12 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, பத்தமேனி, Wuppertal, Germany

16 Sep, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 6ம் வட்டாரம், Mississauga, Canada

12 Sep, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சொலோதென், Switzerland

13 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கொக்குவில், Muscat, Oman, தாவடி, கொழும்பு, Melbourne, Australia

12 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Lampertheim, Germany

12 Sep, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி, Bushey, United Kingdom

13 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, சுவிஸ், Switzerland, England, United Kingdom

14 Sep, 2020
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், Aubervilliers, France

04 Sep, 2025
மரண அறிவித்தல்

மாத்தறை, அரியாலை, கொழும்பு, Harrow, United Kingdom

11 Sep, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US