யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு:கருணாகரம்
இலங்கையின் சுதந்திர தினம் தமிழ் மக்களுக்கு ''கறுப்பு தினம்'' என்ற பிரகடன போராட்டம் மற்றும் பேரணிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பூரண ஆதரவு வழங்கும் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோ.கருணாகரம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்றைய தினம் (31.01.2023) இடம்பெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில், எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதி பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள எதிர்ப்புப் பேரணிக்கு வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் அனைவரும் கிளர்ந்தெழ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
எழுச்சி பேரணி
இலங்கையின் சுதந்திர தினத்தினை தமிழர்கள் கரிநாளாக அனுஸ்டிக்கும் வகையில் வடக்கில் ஆரம்பமாகவுள்ள எழுச்சி பேரணியில், வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் தேசியத்தின் பால் அனைவரையும் ஒன்றிணையுமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றியம் மட்டக்களப்பில் வேண்டுகோள் விடுத்திருந்தது.
எதிர்வரும் 04ஆம் திகதி ஆரம்பமாகும் இந்த எழுச்சி பேரணியானது 07ஆம் திகதி மட்டக்களப்பில் நிறைவடையும் என யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர் விஜயகுமார் தெரிவித்திருந்தார்.
இந்த அழைப்பிற்கு ஆதரவு வழங்கும் வகையிலேயே கோ.கருணாகரம் கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.

நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்களா, CWC புகழ் மணிமேகலையிடம் கேட்ட ரசிகர்- அவர் கொடுத்த உண்மை பதில் Cineulagam

இளவரசர் பிலிப்புடைய சவப்பெட்டியை சுமந்த இராணுவ அதிகாரிக்கு நிகழ்ந்த பரிதாபம்: ஒரு துயரச் செய்தி News Lankasri

இந்த மாதத்துடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் முடிவுக்கு வருகிறதா?- வெளிவந்த விவரம், ரசிகர்கள் ஷாக் Cineulagam

பட்டப்பகலில் லண்டன் பேருந்தில் நடுங்கவைக்கும் சம்பவம்... இரத்தவெள்ளத்தில் சரிந்த இளைஞன் News Lankasri

நடுக்காட்டில் குழந்தையின் அழுகுரல்., பின்தொடர்ந்த பொலிஸாருக்கு காத்திருந்த அதிர்ச்சி! வெளியான திக் திக் காணொளி News Lankasri

ராதிகாவிற்கு சீரியலில் இப்படியொரு டுவிஸ்டா? குழப்பத்தில் நிற்கும் கோபி.. இனி என்ன செய்ய போகிறார் தெரியுமா? Manithan
