தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர்களுக்கு அமைச்சர் கஞ்சன அழைப்பு
தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் அரசுடன் இணைந்தால் மகிழ்ச்சி என நாடாளுமன்ற உறுப்பினர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் (23.06.2023) நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
"மனோ கணேசன், திகாம்பரம், இராதாகிருஷ்ணன் ஆகியோரை வரவேற்பதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம்.
எதிர்க்கட்சித் தலைவரிடம் தூரநோக்கு சிந்தனை கிடையாது. அவரால் உபதேசம் மட்டுமே வழங்கிக்கொண்டிருக்க முடியும்.
எதிர்ப்பு இல்லை
எதிரணியில் உள்ளவர்கள் அரசுடன் இணைவார்கள். அதற்கான சுபநேரம் வரும் வரை காத்திருக்கின்றனர்.
சஜித் தலைமையின் கீழ் எதிர்காலம் இல்லை என்பது அவர்களுக்குத் தெரியும். மனோ கணேசன், திகாம்பரம், இராதாகிருஷ்ணன் போன்றவர்கள் அரசுடன் இணைவதற்கு நாம் எதிர்ப்பு இல்லை" என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 13 மணி நேரம் முன்

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
