தமிழினத் துரோகியாக கூட்டமைப்பினர்! ஜேர்மனியில் போராட்டம் - செய்திகளின் தொகுப்பு (Video)
13ஆம் திருத்தச் சட்டம் ஆரம்பப்புள்ளி அல்ல - புதைகுழி, தமிழினத் துரோகி சுமந்திரன் எனும் கோசங்களுடன் ஜேர்மனியில் போராட்டம் ஒன்று அண்மையில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது இலங்கையில் பேசுபொருளாகியுள்ள 13ஆம் திருத்தச் சட்டம் தொடர்பிலான தமிழ் தலைவர்களின் செயற்பாடு குறித்து கடும் அதிருப்தியும் வெளியிடப்பட்டுள்ளது.
இப்போராட்டத்தின் போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், மற்றும் அதன் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரது படங்களை காட்சிப்படுத்திய போராட்டக்காரர்கள், பாதணிகளால் தாக்கியுமுள்ளனர்.
இது தொடர்பான விரிவான தகல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,