மட்டக்களப்பில் மருத்துநீர் வழங்கும் நிகழ்வுகள்
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நாடெங்கிலும் உள்ள ஆலயங்களில் மருத்துநீர் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்றுவருகின்ற நிலையில் மட்டக்களப்பு அருள்மிகு ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் மருத்துநீர் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றுள்ளது.
ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ புரண சுதாகர குருக்களின் ஆசியுடன் ஆலய வண்ணக்குமார்களினால் இந்த மருத்துநீர் வழங்கும் நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
பெருமளவான பக்தர்கள் ஆலயத்திற்கு வருகை தந்து மருத்துநீர் பெற்றுச்சென்றுள்ளதோடு மாலை 4.30மணி தொடக்கம் மருத்துநீர் வைத்து குளித்து ஆலயத்தில் இரவு 08.15 மணியளவில் நடைபெறும் வழிபாடுகளில் ஈடுபடுமாறு பக்தர்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..