யாழில் நடைபெறவுள்ள தமிழ் தேசிய எழுச்சி நாள்
தாயகத்தமிழரின் தேசியக்குரலை அனைத்துலகத்திற்கு பறை சாற்றும் முகமாக தமிழ் தேசிய எழுச்சி நாள் யாழில் இடம்பெறவுள்ளது.
குறித்த நிகழ்வானது எதிர்வரும் 25 ஆம் திகதி காலை 10மணியளவில் கொடிகாமத்தில் அமைந்துள்ள தனியார் மண்டபம் ஒன்றில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் தமிழ்த்தேசியம் சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழர் தாயகத்தின் எட்டு மாவட்டங்களிலிருந்தும் பெருமளவான தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர்.
வாருங்கள் உறவுகளே
''தந்தை செல்வா காட்டிய கொள்கையை தகர்த்தெறியாமல் பாதுகாப்போம் வாருங்கள் வடகிழக்கு தமிழ் உறவுகளே'' என ஏற்பாட்டுக்குழுவின் அழைப்பில் கூறப்பட்டுள்ளது.

மேலும், தமிழ் தேசியம் சார்ந்த கலைநிகழ்வுகள் , உரைகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரபல சீரியல் நடிகரை திருமணம் செய்துகொண்ட நடிகை சியாமந்தா.. அழகிய ஜோடிக்கு குவியும் வாழ்த்துகள் Cineulagam
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan