தமிழ் தேசிய அரசியல் என்பது பலமானதாக இருக்கவேண்டும்! சிறிநாத் வலியுறுத்து
தமிழ் தேசிய அரசியல் என்பது பலமானதாக இருக்கவேண்டும் என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு - ஐயங்கேணியில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன்போது, உள்ளுராட்சிமன்றங்களின் அதிகாரங்களை கைப்பற்றுவதன் மூலம் இந்த நாட்டிற்கும் சர்வதேசத்திற்கும் தமிழ் மக்கள் தமிழ் தேசியத்துடன் உள்ளார்கள் என்பதை வெளிப்படுத்தவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
உரிமை போராட்டம்
மேலும், நாங்கள் பல ஆண்டுகளாக உரிமைக்காக போராடிய இனம்,பல இழப்புகளை எதிர்கொண்ட இனம்.
அந்தவகையில் எமக்கான உரிமையினை பெறும் வரையில் தமிழ் தேசிய அரசியல் என்பது பலமானதாக இருக்கவேண்டும் எனவும் கூறியுள்ளார்.

அத்தோடு, கிழக்கினை மீட்கவந்தவர்கள் இன்று தங்களையே மீட்கமுடியாத நிலைக்குள் சென்றுள்ளதாகவும் அவர் சாடியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சதய நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி... இந்த ராசிகளுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகுது ஜாக்கிரதை! Manithan
ஆசிரியர் வேலையை உதறிவிட்டு சவப்பெட்டி தொழில்: ஆண்டுக்கு ரூ.54 கோடி வருமானம் ஈட்டும் 29 வயது பெண் News Lankasri
குணசேகரனின் தந்தை ஆதிமுத்து இவர்தான்.. போட்டோவுடன் வந்த கரிகாலன்.. எதிர்நீச்சல் சீரியலின் புரோமோ வீடியோ Cineulagam