மட்டக்களப்பு மாநகரசபையில் அறிக்கையை கிழித்தெறிந்த கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் (Photos)
மட்டக்களப்பு மாநகரசபையில் நிதிக்குழு அறிக்கையை கிழித்தெறிந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளின் உறுப்பினர் உட்பட பிரதி முதல்வர் ஆகியோர் சபை வெளிநடப்பு செய்தமையினால் சபையில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாநகர சபையின் இறுதி அமர்வு இன்று (09.02.2023) காலை மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் வழமையான சம்பிரதாயங்களுடன் ஆரம்பமானது.
இதன்போது மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தலைமையுரையினை தொடர்ந்து, நிதி குழுவின் அறிக்கையை சமர்ப்பித்தது.
அறிக்கைக்கு எதிர்ப்பு
அதற்கு சபையின் அனுமதியை கோரியபோது குறித்த நிதிக்குழுவின் அறிக்கையினை ஏற்றுக்கொள்ளமுடியாது எனவும் அது வாக்கெடுப்புக்கு விடப்படவேண்டும் எனவும் நிதிக்குழுவின் பங்குபற்றல் இல்லாமல் முதல்வரினால் குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக இங்கு குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
எனினும், குறித்த அறிக்கையானது மாநகரசபையின் கட்டளை சட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு குறித்த குழுவின் தீர்மானத்திற்கு ஆதரவு வழங்குமாறும் முதல்வர் கோரிய நிலையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி உறுப்பினர்களும் ஏனைய சுயேட்சை குழு உறுப்பினகளும் குறித்த அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன், வாக்கெடுப்பும் கோரியுள்ளனர்.
இதன்போது சபையில் அமைதியின்மை ஏற்பட்டதுடன், கடுமையான வாக்குப் பிரதிவாதகளும் இடம்பெற்ற நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான தமிழீழ விடுதலை இயக்க உறுப்பினர் ஜெயச்சந்திரன் நிதிக்குழுவின் அறிக்கையினை கிழித்தெறிந்து சபையினை விட்டு வெளியேறிச்சென்றுள்ளார்.
நிதிக்குழு தீர்மானங்கள் நிறைவேற்றம்
இதன்போது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பங்காளிக்கட்சிகளான தமிழீழ விடுதலை இயக்கத்தினை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதி முதல்வர் க.சத்தியசீலன், உறுப்பினர்கள் புளோட் கட்சிகளின் உறுப்பினர், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி உறுப்பினர்கள், சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் என பலர் சபையிலிருந்து வெளியேறிச்சென்ற நிலையில் சபை நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றுள்ளன.
38 உறுப்பினர்களைக் கொண்ட மட்டக்களப்பு மாநகரசபையில் இறுதியாக சபையில் 14 உறுப்பினர்களேயிருந்த நிலையில் நிதிக்குழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதுடன், ஏனைய விடயங்களும் கலந்துரையாடப்பட்டன.
ஊள்ளுராட்சிமன்றங்கள் கலைக்கப்படும் நிலையில் இன்றைய அமர்வு இறுதி அமர்வாக
இருக்கலாம் என்று கூறப்படும் நிலையில், சபையில் அமைதியின்மையும் வெளியேற்றமும்
ஏற்பட்டமை தொடர்பில் மக்கள் அதிர்ப்தி தெரிவித்துள்ளனர்.












காணி நிலம் வேண்டும் பராசக்தி 35 நிமிடங்கள் முன்

இந்தியாவுடனான பதற்றத்திற்கு மத்தியில் ரஷ்யாவுடன் பாகிஸ்தான் ஒப்பந்தம் - வெளிவந்த உண்மை News Lankasri
