வெறுமனே தேர்தல் கூட்டுக்கு உடன்பட தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தயாரில்லை - அருந்தவபாலன்

Kilinochchi Tamil National Alliance Tamil People
By Sudaron Jun 21, 2021 10:40 AM GMT
Report

வெறுமனே தேர்தல் கூட்டுக்கு உடன்பட தமிழ் மக்கள் தேசிய கூட்டணி தயாரில்லை என கட்சியின் பேச்சாளரும், கொள்கைப்பரப்பு செயலாளருமான அருந்தவபாலன் பதில்வழங்கியுள்ளார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெறற் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கப்பட்டதாவது,

சமகால அரசியல் நிலை தொடர்பில் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த அருந்தவபாலன், தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுக்களை முன்னெடுக்கும்போது, அரசிடம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சலுகைகளை பெற்றுக்கொள்ளாது தமிழர் உரிமைக்காக பேசுபவர்களையும் அழைத்து சென்று பேசுவதே பலமாக அமையும் என அவர் குறிப்பிட்டிருந்தார்.

குறித்த விடயம் தொடர்பில் வினா தொடுத்த ஊடகவியலாளர், இவ்வாறான கருத்தையே தங்கள் கட்சியின் தலைமையிலான ஊட்டணியில் தற்போது உள்ள சுரேஸ் பிரேமச்சந்திரனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்தபோது கருத்துக்களை முன்வைத்திருந்தார்.

தமிழரசு கட்சி பங்காளி கட்சிகளை அழைத்து செல்வதில்லை என அவர் கூறி வந்திருந்தார் இந்த நிலையில் தற்போது நீங்கள் கூறும் விடயத்தை அவர்கள் ஏற்பார்களா என அவரிடம் வினவினார்.

அதற்கு பதிலளித்த அருந்தவபாலன், குறித்த குற்றச்சாட்டு பொதுவாக இருந்தது அதற்கு மக்கள் தகுந்த பதிலை வழங்கியுள்ளனர் தற்போது அது தொடர்பில் அவர்களும் வாய் திறந்துள்ளனர் ஆனாலும் தற்போது உள்ள சூழலில் அனைவரும் இணைந்து ஒரு பலமாக பேச்சுக்களில் ஈடுபடுவதே பொருத்தமானது என அவர் இதன்போது தெரிவித்தார்.

அரசின் சலுகைகளிற்கு இணங்காத தமிழ் தேசிய கட்சிகள் என்ற விடயத்தை இன்றைய ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தீர்கள் தற்போதுள்ள அரசின் சலுகைகளிற்கு இணங்காதவர்களா? அல்லது எந்தவொரு காலத்திரும் சலுகைகளிற்கு விலை போகாதவர்களா எனவும், ஏற்கனவே பல்வேறு சந்தர்ப்பங்களில் நீங்களே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசின் சலுகைகளிற்கு விலை போய்விட்டது என்றவாறான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தீர்கள் அதனால் மக்கள் தெளிவடைய இந்த கேள்வி அமைகின்றது என ஊடகவியலளாளர் வினவினார்.

அதற்கு பதிலளித்த அருந்தவபாலன்,

கடந்த காலங்களில் அவ்வாறான விமர்சனங்கள் எழுந்திருந்தது ஆனால் அதனை அவர்கள் தற்போது உணர்ந்துள்ளனர் இந்த நிலையில் கடந்தவை மறந்து தமிழ் மக்களின் பிரச்சினைகளிற்காக பலமான சக்தியாக பேச்சுக்களில் ஈடுபட வேண்டும் என அவர் இதன்போது தெரிவித்தார்.

அண்மையில் தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜா அனைத்து கட்சிகளையும் இணைத்து மாகாண சபை தேர்தலில் போட்டியிட உள்ளதான அழைப்பு ஒன்றை விடுத்திருந்தார் அது தொடர்பில் உங்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன என அவரிடம் ஊடகவியலாளர் வினவினார்.

அதற்கு பதிலளித்த அருந்தவபாலன், தேர்தலிற்காக கூட்டு சேர்வதற்கு நாங்கள் தயாரில்லை. உண்மையாக மக்களிற்கு குரல் கொடுக்கவும், மக்களின் பிரச்சினைகளிற்கு தீர்வு பெற்றுக்கொடுப்பதும் எமது நிலைப்பாடு அவ்வாறான சந்தர்ப்பங்களில் மாத்திரமே நாங்கள் ஒரு பலம் பொருந்திய சக்தியாக இருப்போம் எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

இதேவேளை அரச கரும மொழியான தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச திணைக்களங்களிலும் இவ்வாறு தமிழ்மொழி புறக்கணிக்கப்பட்டு தனி சிங்கள மொழியிலேயே கடிதங்கள் அனுப்பப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், அரச தகவல் நிலையத்திலும் அவ்வாறான நிலையே காணப்படுகின்றது அங்கு குறிப்பிடப்பட்டுள்ள பல்வேறு இடங்களில் தமிழ் மொழியில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன.

தவறான உச்சரிப்புக்கள் அங்கு காணப்படுகின்றன கிராமங்களின் தமிழ்ப் பெயர்கள் வேறுபட்டு காணப்படுகின்றது இவ்வாறான நிலை தொடர்பில் மாற்றங்களை ஏற்படுத்தி அரச கரும மொழியான தமிழ் மொழியையும் முறையாக பயன்படுத்தும் வகையிலான கோரிக்கையை எமது கட்சி இன்று வெளிவிடுக்கின்றது எனவும் அவர் இதன்போது தெரிவித்தார். 

மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், சுன்னாகம் கிழக்கு

07 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
நன்றி நவிலல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, வவுனியா

10 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom

06 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US