நாடளாவிய ரீதியில் பல பகுதிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்ட தமிழக நிவாரண பொருட்கள் (Photos)

Nuwara Eliya Sri Lanka Economic Crisis Sri Lankan Peoples India
By Kanamirtha Jun 02, 2022 09:07 AM GMT
Kanamirtha

Kanamirtha

in சமூகம்
Report

இலங்கையில் பொருளாதார நிதி நெருக்கடி காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தமிழ்நாட்டு மக்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்களை அன்பளிப்பாக வழங்கியுள்ள நிலையில் குறித்த உலர் உணவுப் பொருட்கள் அனைத்து மாவட்ட மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டு வருகிறது.

ஹட்டன்

இந்தியாவின் தமிழ்நாடு முதலமைச்சரால் அன்பளிப்புச் செய்யப்பட்ட பொருள்கள் விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்ட புகையிரதம் மூலம் இன்று காலை ஹட்டனை வந்தடைந்ததாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார். 

ஹட்டன் - அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளுக்கான தமிழக நிவாரணப் பொருட்கள் கொழும்பிலிருந்து புகையிரதத்தில் ஹட்டன் புகையிரத நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டு உடனடியாக விநியோகிக்கப்பட்டுள்ளன. 

நாடளாவிய ரீதியில் பல பகுதிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்ட தமிழக நிவாரண பொருட்கள் (Photos) | Tamil Nadu Relief Distributed Various Parts Island

கிராமசேவகர் பிரிவுகளினுடாக நிவாரணம் 

இந்நிலையில் நுவரெலியா - அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதியில் 67 கிராம சேவகர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட 23350 குடும்பங்களுக்கு வழங்குவதற்காக நிவாரண பொருட்கள் லொறிகளில் மூலம் அனுப்பப்பட்டுள்ளன. 

மேலும், இவ்வாறு கிராம சேவகர்களின் ஊடாக கொண்டு செல்லப்படும் உணவுப் பொருட்கள் எதிர்வரும் நாட்களில் பயனாளர்களுக்கு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தி - திருமால் 

நாடளாவிய ரீதியில் பல பகுதிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்ட தமிழக நிவாரண பொருட்கள் (Photos) | Tamil Nadu Relief Distributed Various Parts Island

நாடளாவிய ரீதியில் பல பகுதிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்ட தமிழக நிவாரண பொருட்கள் (Photos) | Tamil Nadu Relief Distributed Various Parts Island

நாடளாவிய ரீதியில் பல பகுதிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்ட தமிழக நிவாரண பொருட்கள் (Photos) | Tamil Nadu Relief Distributed Various Parts Island

வவுனியா

பொருளாதார நெருக்கடியால் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கு இந்தியாவின் தமிழக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 22,550 அரிசி பொதிகளும், 750 பால்மா பொதிகளும் இன்று காலை வவுனியாவை வந்தடைந்தது.

விசேட புகையிரதம் மூலம் வவுனியாவை வந்தடைந்த நிவாரணப் பொதிகள் வவுனியா புகையிரத நிலைய அத்தியட்சகரால் மாவட்ட செயலக அதிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளன. 

நாடளாவிய ரீதியில் பல பகுதிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்ட தமிழக நிவாரண பொருட்கள் (Photos) | Tamil Nadu Relief Distributed Various Parts Island

தமிழக அரசாங்கத்தின் உதவி 

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து இலங்கை மக்களுக்காகத் தமிழக அரசினால் அரிசி, பால்மா உள்ளடங்கிய நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

அதில் வடமாகாணத்தின் வவுனியா மாவட்டத்திற்கு 22,550 அரிசி மற்றும் 750 பால்மா பொதிகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.

நாடளாவிய ரீதியில் பல பகுதிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்ட தமிழக நிவாரண பொருட்கள் (Photos) | Tamil Nadu Relief Distributed Various Parts Island

அதற்கான நிவாரணப் பொதிகள் வவுனியாவை வந்தடைந்த நிலையில் அதனை மாவட்ட செயலக அதிகாரிகள் பொறுப்பேற்று பிரதேச செயலாளர்களிடம் கையளித்தனர்.

அந்தவகையில் வவுனியா பிரதேச செயலக பிரிவுக்கு 12,315 அரிசி, 452 பால்மா பொதிகளும், செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவுக்கு 4675 அரிசி மற்றும் 148 பால்மா பொதிகளும், வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவுக்கு 3560 அரிசி, 116 பால்மா பொதிகளும் வவுனியா தெற்கு பிரதேச செயலக பிரிவுக்கு 2000 அரிசி, 34 பால்மா பொதிகளும் வழங்கப்பட்டுள்ளன.

நாடளாவிய ரீதியில் பல பகுதிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்ட தமிழக நிவாரண பொருட்கள் (Photos) | Tamil Nadu Relief Distributed Various Parts Island

அவை கிராம அலுவலர் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் ஊடாக கிராம மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளன.

நாடளாவிய ரீதியில் பல பகுதிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்ட தமிழக நிவாரண பொருட்கள் (Photos) | Tamil Nadu Relief Distributed Various Parts Island

செய்தி - திலீபன் 

அம்பகமுவ 

அம்பகமுவ பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட 67 கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள 22 ஆயிரத்து 500 குடும்பங்களுக்கு இந்திய தமிழ்நாட்டு அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட நிவாரண பொருட்கள் இன்று முதல் பெற்றுக் கொடுக்கப்பட்டு வருவதாக அம்பகமுவ பிரதேச செயலாளர் சித்தாரா கமகே தெரிவித்துள்ளார்.

குறித்த உணர்வு பொருட்கள் இன்று இரண்டாம் திகதி ஹட்டன் புகையிரத நிலையத்தில் கொண்டுவந்த இறக்கியதும் தொடர்ந்து ஊடகங்களுக்குக் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் இதன்போது மேலும் தெரிவிக்கையில்,

இந்திய நிவாரண பொருட்களை முதற்கட்டமாக இன்றைய தினம் அரிசி விநியோகிக்கப்பட்டது. முதற்கட்ட உணவுப்பொருட்கள் வழங்கிவைப்பு இந்த அரசி ஒரு குடும்பத்துக்கு 10 கிலோ கிராம் வீதம் தோட்டத்தொழிலாளர்களுக்கும் வறுமையான குடும்பங்களுக்கும் பெற்றுக்கொடுக்க உள்ளத்துடன், இதில் 35 தோட்டப்புறங்களைச் சேர்ந்த கிராமசேவகர் பிரிவுகளிலும் 22 வறிய குடும்பங்கள் உள்ள கிராம சேவகர் பிரிவிலும் பகிர்ந்தளிக்கப்பட உள்ளது.

இந்த நிவாரண பொருட்கள் பெற்றுக் கொடுப்பதில் எவ்வித அரசியல் தலையீடும் இருக்கவில்லை. இதனை மிகவும் நியாயமான முறையில் உரிய குடும்பங்களுக்குப் பெற்றுத் தர நடவடிக்கை எடுக்கப்பட்டது. அடுத்தடுத்து வரும் நிவாரண பொருட்களைத் தொடர்ந்தும் பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிவாரண பொருட்கள் சீல் வைக்கப்பட்ட புகையிரதப் பெட்டி ஒன்றில் கொண்டுவரப்பட்டு பிரதேச செயலாளரினால் சீல் உடைக்கப்பட்டு உரியவர்களிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு, Montreal, Canada, Saint-Eustache, Canada

14 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை பள்ளம்புலம், காரைநகர், Toronto, Canada

18 Nov, 2024
மரண அறிவித்தல்

பெரியபளை, கல்கிசை, கனடா, Canada

13 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கிளிநொச்சி

30 Nov, 2024
மரண அறிவித்தல்

மானிப்பாய், வண்ணார்பண்ணை, London, United Kingdom

14 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை, கல்வியங்காடு

17 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bangkok, Thailand, Canberra, Australia

16 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Sinsheim, Germany

29 Nov, 2024
நன்றி நவிலல்

புலோலி தெற்கு, மட்டுவில் தெற்கு, Mississauga, Canada

12 Oct, 2025
18ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி, கரணவாய் மேற்கு

09 Dec, 2007
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

பருத்தித்துறை, London, United Kingdom

19 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள், யாழ்ப்பாணம், கொழும்பு

16 Nov, 2023
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Gossau, Switzerland

14 Nov, 2025
மரண அறிவித்தல்

உடுவில், Vancouver, Canada, Scarborough, Canada

15 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சிங்கப்பூர், Singapore, அளவெட்டி, மல்லாகம், Newbury Park, United Kingdom, Wickford, United Kingdom

28 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Toronto, Canada

28 Nov, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், திருகோணமலை, Randers, Denmark

30 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

உரும்பிராய், கோப்பாய், Ontario, Canada

14 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், உடுப்பிட்டி, Worthing, United Kingdom

13 Nov, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

பூநகரி, பிரான்ஸ், France, நோர்வே, Norway

16 Nov, 2013
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், ஏழாலை, Bad Harzburg, Germany

10 Nov, 2025
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, Bremen, Germany

10 Nov, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, உருத்திரபுரம்

15 Nov, 2010
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US