“உதவி வாங்கி கைகளின் ஈரம்கூட காயாத நிலையில்” இந்தியாவுக்கு இலங்கை செய்யும் காரியம்
தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடப்படும் என்று இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள அறிவித்ததற்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடிப்பதாக கூறி, இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்து அவர்களின் படகுகளை பறிமுதல் செய்யும் நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன.
அந்த வகையில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை தமிழக மீனவர்களின் 105 படகுகளை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
அந்த படகுகளை இலங்கை அரசாங்கம் அரசுடைமையாக்கி உள்ளது.
இந்தநிலையில் அந்த படகுகள் அனைத்தும் வரும் எதிர்வரும் பெப்ரவரி 7 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை ஏலத்தில் விடப்படும் என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்த படகுகளை ஏலத்தில் விடுவதற்கான உரிமை இலங்கை அரசாங்கத்துக்கு இல்லை.
இந்தியாவிடமிருந்து இலங்கை 18,090 கோடி ரூபா கடன் வசதியை பெற்றுள்ளது.
உதவி வாங்கிய கைகளின் ஈரம் கூட இன்னும் காயாத நிலையில், படகுகளை ஏலத்தில் விட்டு மீனவர்களின் வாழ்வாதாரத்தை அழிக்க இலங்கை துடிப்பது நியாயமல்ல.
இலங்கையின் உண்மை முகத்தை இந்தியா அறிய வேண்டும். மீனவர்கள் கைதாகி விடுவிக்கப்பட்டால் அவர்களின் படகுகளையும் ஒப்படைக்க இலங்கை கடந்த காலத்தில் ஒப்புக் கொண்டுள்ளது
.
எனவே அதன்படி இலங்கை சிறைகளில் இப்போது வாடும் 56 மீனவர்களையும், அனைத்து படகுகளையும் விடுவிக்கும்படி இலங்கைக்கு மத்திய அரசாங்கம் அழுத்தம் தர வேண்டும் என்று ராமதாஸ் கோரியுள்ளார்.