யாழ்.மாவட்ட அநுர அரசின் தமிழ் எம்.பி வெளியேற்றமா..! விரைவில் அதிர்ச்சிகள் பல
நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் நேற்றையதினம் நாடாளுமன்றத்திலே மிக முக்கிய விடயம் ஒன்றை குறிப்பிட்டிருற்தார்.
அதாவது ஆளும் தரப்பில் இருக்கக்கூடிய யாழ்ப்பாண மாவட்ட தமிழ் எம்.பிக்களை தமிழரசுக் கட்சி பக்கம் வருமாறு கூறியிருந்தார்.
இந்நிலையில், அரசினுடைய போக்கு இன்னும் அதிகமாக செல்லுமாக இருந்தால் தேசிய மக்கள் சக்தியில் இருக்கக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் என்பிபி இல் இருந்து வெளியேறுவதற்கான வாய்ப்பு அதிகமாக காணப்படுவதாக கூறப்படுகிறது.
குறித்த நாடாளுமன்ற உறுப்பினரோடு பெரும் எண்ணிக்கையான உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள் அரசாங்த்தின் செயற்பாடுகளால் அதிருப்தியடைந்து வெளியேறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் வெகுவில் இடம்பெறவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுதொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால்....
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இஸ்ரேல் ஏடன் வளைகுடாவில் திறந்துள்ள மூலோபாயம் முன்னரங்கு 13 மணி நேரம் முன்
Viral Video: வானில் மீனுடன் பறந்த கழுகுக்கு நேர்ந்த துயரம்... பெலிகான் பறவையின் மோசமான செயல் Manithan