தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளராக தமிழர் நியமனம்
இலங்கை (Sri Lanka) வரலாற்றில் முதல் முறையாக யாழ்ப்பாணத்து (Jaffna) தமிழர் ஒருவர் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
முன்னர் வடக்கு மற்றும் வட மத்திய பிராந்திய சேவைகள் நிலையத்தின் மேலதிக பொது முகாமையாளராக கடமையாற்றிய பாலசிங்கம் பாரதிதாசன் என்பவரே பொது முகாமையாளராக இன்று (06) கொழும்பு (Colombo) தலைமைக் காரியாலயத்தில் தனது பதவியினை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார்.
நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை
இவர் 1991இல் இளங்கலை பொறியியல் (சிவில்) பட்டத்தினை மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்திலும் ,1998இல் கட்டுமான முகாமைத்துவத்தில் முதுமாணிப் பட்டத்தினை மொறட்டுவ பல்கலைக்கழகத்திலும், 2008இல் நீரியல் மற்றும் நீர் வளங்கள் கற்கைகளில் முதுமாணிப் பட்டத்தினை நெதர்லாந்து பல்கலைக்கழகத்திலும், 2018இல் வணிக நிர்வாகத்தில் முதுமாணிப் பட்டத்தினை இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகத்திலும் பெற்றுள்ளார்.
இந்நிலையில், இலங்கை பொறியியலாளர் நிறுவனத்தின் fellowship ஆகவும் உள்ளார்.
மேலும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையில் பொறியியளாளராக, பிராந்திய முகாமையாளராக , திட்ட முகாமையாளராக, உதவிப் பொது முகாமையாளராக, திட்டப் பணிப்பாளராக, பிரதிப் பொது முகாமையாளராக, மேலதிக பொது முகாமையாளராக என பல்வேறு பதவிகளை வகித்ததன் ஊடாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையில் தனக்கென ஒரு தடம் பதித்துக் கொண்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 14 ஆம் நாள் மாலை திருவிழா





இந்தியா மீதான 50% வரி: இது அரசியலமைப்பிற்கு எதிரானது! அமெரிக்க பொருளாதார நிபுணர் எதிர்ப்பு News Lankasri

பாட்டியை காணவில்லை, க்ரிஷ் அம்மாவை கண்டுபிடிக்க மீனா சொன்ன விஷயம், சிக்கப்போகும் ரோஹினி... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

ஆசிய நாடொன்றிற்கு எலோன் மஸ்க் விடுத்த கடும் எச்சரிக்கை... 1 மில்லியன் மக்களை இழக்கலாம் News Lankasri

சன் டிவியின் கயல் சீரியலில் என்ட்ரி கொடுக்கும் தமிழ் சினிமா முன்னணி நடிகை... யார் தெரியுமா, வீடியோ இதோ Cineulagam
