முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கு ஒரு சுதந்திர அரசே பரிகாரம்!
முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கு ஒரு சுதந்திர அரசே பரிகாரம் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் பணிமனை தெரிவித்துள்ளது.
நேற்றையதினம் (18.05.2025), முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையின் 16ஆவது ஆண்டு நிறைவையொட்டி வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில் மேலும்,"2009 மே மாதத்தில் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிங்கள அரசாங்கம் நடத்திய இனவெறியாட்டத்தின் நினைவு நாள். உலகமெங்கும் பரந்து வாழும் தமிழ் மக்களின் மனதில் வடுவாய் பதிந்துவிட்ட இனவழிப்பின் துயர நினைவுகளை தமிழ்மக்கள் ஒருங்கிணைந்து நினைவுகூரும் நாள்.
மானுட இயற்கை அழிப்பு
2009 இல் இறுதி யுத்த காலப்பகுதியில் சிங்களப் படையால் நடத்தப்பட்ட கொடுமைகள் மனித குல வரலாறு வெட்கித் தலைகுனிய வேண்டியவை.
இருபத்தியோராம் நூற்றாண்டின் உலகில் எந்த பகுதியிலும். நடந்திராத பெரும் மானுட இயற்கை அழிப்பை இலங்கை அரச படைகள் தமிழீழ மண்ணில் நடத்தி முடித்திருந்தன.
ஆயிரமாயிரமாய் தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு என்ன நடந்தது என்பது இன்று வரை தெரியவில்லை.
பெரும் குண்டுகள் பொழிந்தும் துப்பாக்கி குண்டுகளால் துளைத்தும் எங்கள் மக்கள் கொல்லப்பட்டனர். நடந்தவர்கள் மீதும், படுத்திருந்தவர்கள் மீதும், ஓடியவர்கள் மீதும், ஒழித்து இருந்தவர்கள் மீதும் கலைத்துக் கலைத்து சிறிலங்காவின் அரச படை கொடும் மனித வேட்டையை நிகழ்த்தியது. முள்ளிவாய்க்கால் இனவழிப்புக்கு ஒரு சுதந்திர அரசே பரிகாரம்” என குறிப்பிட்டுள்ளது.












அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri
