லண்டனில் கோர சம்பவம் - இலங்கை தமிழ் குடும்பம் உயிரிழப்பு
லண்டனில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் இலங்கையை சேர்ந்த தமிழ் குடும்பம் ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இந்த அனர்த்தம் காரணமாக இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு பெக்ஸ்லிஹீத்தில் உள்ள ஹாமில்டன் வீதியிலுள்ள வீட்டில் இந்த பயங்கரமான தீவிபத்து ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு உடனடியாக 6 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் சுமார் 40 தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டனர்.
விரைந்து செயற்றபட்ட தீயமைணப்பு வீரர்கள் உயிர்களை காப்பாற்ற போராடிய போதும், உயிழந்த சடலங்களே மீட்கப்பட்டுள்ளன.
இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகளை மீட்டனர், ஆனால் அவர்கள் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 22
டன் கணக்கிலானத் தங்கத்தை அமெரிக்காவிலிருந்து வெளியேற்றும் ஐரோப்பிய நாடுகள்: என்ன காரணம் News Lankasri
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற ஒப்பந்தமிடும் ஐந்து ஐரோப்பிய நாடுகள் News Lankasri