கனடாவில் மில்லியன்கணக்கான பண மோசடியில் ஈடுபட்ட தமிழ் குடும்பம் - உறுதி செய்யப்பட்ட குற்றச்சாட்டுகள்
கனடாவில் நிதி மோசடியில் ஈடுபட்ட தமிழ் குடும்பம் ஒன்றின் மீதான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
கனடா சிறு வணிக நிதித் திட்டம் (CSBF) மூலம் பெறப்பட்ட ஒரு மில்லியன் டொலருக்கும் அதிகமான நிதியை மோசடி செய்துள்ளதாக குறித்த குடும்பத்திற்கு எதிரான குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சிறு வணிக நிதித் கடன் திட்டத்தின் நோக்கம் சிறிய மற்றும் நடுத்தர கனேடிய வணிகங்களுக்கு நிதி ஆதாரங்களுடன் உதவுவதாகும்.
எனினும், டொராண்டோவை சேர்ந்த தமிழ் குடும்பம் இந்த நிதியை மோசடியான முறையில் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஒரு மில்லியன் டொலர்களுக்கு அதிகமான நிதி மோசடி செய்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் டொராண்டோவை சேர்ந்த தமிழ் குடும்பத்தின் மீது ரோயல் கனடியன் பொலிஸாரிடம் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.
2017ம் ஆண்டு இடம்பெற்ற நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிறிய மற்றும் நடுத்தர கனேடிய வணிகங்களுக்கு உதவும் வகையில் முன்னெடுக்கப்பட்ட நிதி உதவி திட்டத்தின் ஊடாக தமிழர்கள் குழுவினால் நிதி மோசடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கனேடியர்களுக்கு வழங்கப்பட்ட இந்த உதவி தொகையை பலரின் பெயர்களில் மோசடியான முறையில் பெறுவதற்காக இந்த தமிழர்கள் முயற்சித்துள்ளதாக தெரியவந்துள்ளது. அதற்காக பாரிய அளவிலான மோசடி ஆவணங்களை கொண்டு உதவித் தொகைக்கு விண்ணப்பித்துள்ளதாக விசாரணைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில், கஜீபன் நடராஜா, சின்னத்தம்பி நடராஜா, கருணாதேவி நடராஜா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக கனேடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
RCMP uncovers complex fraud scheme leading to charges for Toronto family
You My Like This Video

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 14 மணி நேரம் முன்

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri

மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம் Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
