இரு போட்டிக் கட்சியினருக்கும் ஒருவரே கூலிக்கு சுவரொட்டி ஒட்டும் தமிழ்த் தேர்தல் களநிலை

Tamils General Election 2024 Parliament Election 2024
By T.Thibaharan Oct 28, 2024 11:26 AM GMT
T.Thibaharan

T.Thibaharan

in கட்டுரை
Report

முள்ளிவாய்க்கால் பேரவலம் என்பது ஈழத் தமிழரின் அரசியலில், தமிழரின் தாயக இருப்பியலில், தமிழ்த்தேசியம் என்னும் கருத்தியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டது.

இத்தகைய ஒரு தாக்கம் ஏற்படும் என தமிழ் அரசறிவியலாளர்கள் குறிப்பிட்டு அதனைக் கையாண்டு வெற்றி கொள்ளக் கூடிய உபாயங்களை தெரிவித்திருந்தும் கூட அரசியல்வாதிகள் எனப்படுவோர் அதனை சாட்டை செய்யாது , இதனை ஒரு கருத்தியலாக ஏற்க மறுத்ததன் விளைவுகள் 2024 பொதுத் தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்களினதும் அவர்களுடைய செயற்பாடுகளும் எதிர்காலத்தில் தமிழ் தேசியத்தை கட்டமைக்க முடியுமா? என்ற ஐயப்பாட்டை தோற்றுவித்திருக்கிறது.

மக்கள் சேவைகள் ஏதேனிலும் ஈடுபட்டார்களா.. 

அந்த அளவிற்கு தமிழர் தாயக பரப்பெங்கும் தமிழ்த் தேசியம் சிதைக்கப்பட்டு சின்னா பின்னப்பட்டு தமிழர்கள் தமிழர்களாக வாழாது பதவி வெறி பிடித்த அரசியல் மிருகங்களாக மாறும் அளவிற்கு தமிழ அரசியல் பரப்பு தற்போது ஒரு துயரகரமான பக்கத்தை நோக்கிச் செல்கிறது.

இலங்கை சுதந்திரம் அடைவதற்கு முன்னர் 1947 இல் ஆகஸ்ட் , செப்டெம்பர் ஆகிய இரண்டு மாதங்களிலும் 13 நாட்கள் தேர்தல்கள் நடைபெற்றன.

இரு போட்டிக் கட்சியினருக்கும் ஒருவரே கூலிக்கு சுவரொட்டி ஒட்டும் தமிழ்த் தேர்தல் களநிலை | Tamil Election Field One Poster Both Rival Parties

அன்றைய காலத்தில் இருந்த வசதி வாய்ப்புகள் இவ்வாறு தேர்தலை நடத்த பல நாட்கள் தேவையாக இருந்தது என்பதையும் நினைத்துக் கொள்க. 

சுதந்திரம் அடைந்தபோது இருந்த நாடாளுமன்ற ஆசனங்கள் 101 அதில் ஆறு பேர் நியமன உறுப்பினர்கள். ஆகவே 95 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலில் சில நுாறு வேட்பாளர்களே போட்டியிட்டனர்.

ஆனால் 1978 ஆம் ஆண்டு அரசியல் யாப்பின் பிரகாரம் இன்றைய நாடாளுமன்றத்தில் 225 ஆசனங்கள் இருக்கின்ற போதிலும் 195 ஆசனங்களுக்கான பிரதிநிதிகள் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படுகின்றனர்.

இந்த அடிப்படையில் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் 8352 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக திணைக்களம் அறிவித்திருக்கிறது. 

இலங்கையின் அரசியல் செல்போக்கில் தேர்தலில் போட்டியிடுபவர்களுடைய எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கிவிட்டது. ஆயினும் இந்த தேர்தலில் போட்டியிட்டு மக்கள் பிரதிநிதிகளாக தம்மை அடையாளப்படுத்த விரும்புவர்கள் கடந்த காலத்தில் மக்கள் சேவைகள் ஏதேனிலும் ஈடுபட்டார்களா என்று தேடினால் அது மிகக் குறைவாகவே காணப்படுகிறது.

அப்படியாயின் இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்பம் எவ்வாறு தோன்றுகிறது என்பது ஆராயப்பட வேண்டிய விடயம். அது மிக நுணுக்கமாகவும் சமூகவியலுடனும், உளவியல், மெய்யியல் சார்ந்தும் நோக்கப்பட வேண்டிய விடயம் என்பதனால் அதனை இப்போது விட்டுவிட்டு நடைமுறையில் என்ன உள்ளது என்பதை பார்ப்போம். 

முள்ளிவாய்க்கால் பேரவலம்

ஒப்பிட்டு ரீதியில் இலங்கை தீவின் அதிகூடிய சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடும் பகுதியாக தமிழர் தாயகம் மாறி இருக்கிறது. சிங்கள தேசத்தையும்விட பன்மடங்கு அதிகமான வேட்பாளர்கள் தமிழர் பகுதியில் போட்டியிடுவதை அவதானிக்க முடிகிறது.

இதற்கான முதற்காரணமாக அரசியலுக்கு வந்தால் எதையும் சாதிக்கலாம், பணம் பண்ண இலகுவான தொழில் என எண்ணும் மனநிலையே பொதுவாக எல்லோரிடமும் காணப்படுவதை அவதானிக்க முடிகிறது. 

இரு போட்டிக் கட்சியினருக்கும் ஒருவரே கூலிக்கு சுவரொட்டி ஒட்டும் தமிழ்த் தேர்தல் களநிலை | Tamil Election Field One Poster Both Rival Parties

இத்தகைய ஒரு மனநிலை தமிழர் தாயகத்தில் தோன்றுவதற்கான காரணங்கள் பல. ஆயினும் அதற்கான அடிப்படை காரணமும் அதற்கான சூழலையும் தோற்றுவித்தது முள்ளிவாய்க்கால் பேரவலம்தான் என்பதை யாரும் மறுத்துவிட. முடியாது.

முள்ளிவாய்க்கால் பேரவலம் என்பது தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவ வெற்றிடத்தை ஏற்படுத்திவிட்டது. தமிழ் மக்களின் அரசியல் தலைவிதியை நிர்ணயிக்கக்கூடிய தலைமைத்துவ வெற்றிடத்தை நிரப்புவதற்கு தகுதியான தலைமைத்துவங்கள் முன்வரவில்லை.

அதேநேரத்தில் அத்தகைய ஒரு தலைமைத்துவத்தை இன்னும் யாரும் இனங்காணவும் முடியவில்லை. ஆனால் ஓடுகாலி தலைமைகள் பலவும் முளைத்து எழும்பத் தொடங்கிவிட்டது என்பது இன்னொரு பக்க துரதிஷ்டம். 

முள்ளிவாய்க்காலுக்கு பின்னான கடந்த 15 ஆண்டு கால தமிழ் அரசியல் வெளியில் தலைமைத்துவம் அற்றதாகவும், அல்லது அவ்வாறு காட்டப்படும் தலைமைத்துவங்கள் செயலற்றவையாகவும், எதிரிக்கு சேவகம் செய்வனவாகவும், அல்லது எதிரிகளோடு ஒத்தோடுபவையாகவும் மக்களால் இனங்காணப்பட்டு இருக்கிறன.

இந்நிலையில் புதிய தலைமைத்துவங்கள் வருவதை சந்தேகக் கண்கொண்டு மக்கள் பார்க்கும் நிலையை தோற்றுவித்திருக்கின்றது. இங்கே யார் உண்மையானவர்? யார் நேர்மையானவர்? யார் தேசியவாதி? என இனம் காணுவது தமிழர் தாயகத்தில் மிக கடினமானதொரு முயற்சியாகவே இன்று எம்முன்னே எழுந்து நிற்கிறது. 

ஆயுத மௌனிப்புக்கு பின்னான அரசியல் முன்னெடுப்பு

கடந்த 15 ஆண்டு கால தமிழர் அரசியலை வழி நடத்தியவர்களும், அரசியலில் பங்கு கொண்டவர்களும் தமிழ் அரசியல் வெற்றிடத்தை நிரப்ப முடியவில்லை என்பது மாத்திரமல்ல தமிழ் மக்கள் செல்வதற்கான வழியையும், திசையையும் காட்டத் தவறிவிட்டனர்.

இன்று தமிழ் மக்கள் ஒரு அரசியல் அனாதைகளாக, மேய்ப்பான் இல்லாத மந்தைகளாக அலைகிறார்கள்.

இரு போட்டிக் கட்சியினருக்கும் ஒருவரே கூலிக்கு சுவரொட்டி ஒட்டும் தமிழ்த் தேர்தல் களநிலை | Tamil Election Field One Poster Both Rival Parties

முள்ளிவாய்க்கால் ஆயுத மௌனிப்புக்கு பின்னான அரசியல் முன்னெடுப்புக்களில் தமிழ் மக்களுக்கு வழிகாட்டக்கூடிய தமிழ் மக்கள் நம்பக்கூடிய தமிழ்த் தேசியத்தை கட்டமைக்கக்கூடிய எந்த தலைவர்களையும் இந்த நிமிடம் வரையும் தமிழ் மக்கள் இனங்காணவில்லை அல்லது இனங்காட்டப்படவில்லை என்பது ஒரு தொன்மையான வரலாற்றையும் பண்பாட்டையும் தன்னகத்தே கொண்ட தமிழ்த் தேசிய இனத்திற்கு பெருத்த பின்னடைவும் அவமானமும்தான். 

ஆயினும் இவற்றை நிவர்த்தி செய்வதற்கான அறிவியல் வளர்ச்சி தமிழ் மக்களிடம் உண்டு என்பதையும் மறந்து விடக்கூடாது தமிழ் மக்கள் தமது அறிவியல் வளத்தைப் பயன்படுத்தி இந்த வெற்றிடத்தை வெற்றி கொள்வதற்கான வாய்ப்புகள் தொடர்ந்தும் உள்ளது என்று சொல்வதே பொருந்தும்.

 தமிழ் மக்களுக்கு நம்பிக்கையான தலைவர்களோ முன்னுதாரணமான தலைவர்களோ இல்லாதவிடத்து தமிழ் மக்கள் சாத்தானின் கையில் விடப்பட்டவர்கள் போல பல திசைகளிலும் பயணிக்க தொடங்கி விட்டனர்.

அதே நேரத்தில் தமிழ் மக்களை வழிப்படுத்தக்கூடிய தமிழ் தேசியக் கூட்டமைப்பை தமிழீழ விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் இறுதியாக விட்டுத்தான் சென்றது.

ஆயினும் அந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பை சம்பந்தனோ, மாவை சேனாதிராஜாவோ அல்லது அவர்களுக்கு பின்னே இருக்கின்ற யாராயினும் சரியாக வழி நடத்த தவறிவிட்டனர்.

அவர்கள் வழிதவற விட்டதன் விளைவு தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து இணைந்த அனைத்துக் கட்சியினரும் வெளியேறிவிட்டனர். அவ்வாறு வெளியேறியவர்கள் மூன்று அணியினராக இப்போது களத்தில் இருக்கின்றனர்.

அதே நேரத்தில் இந்த மூன்று அணியிலும் இருந்து பிரிந்து சென்றவர்கள் இன்னும் பல அணிகளாக தோற்றம் பெற்று இருக்கின்றனர்.

அதே நேரத்தில் தமிழ்த் தேசியம் பேசுகின்ற அரசியல் கட்சிகளில் இருந்து அவர்களுடைய செயல்பாடுகளின் நம்பிக்கை இழந்து, கட்சிகளுடைய தான்தோன்றித்தனங்களிலிருந்து தமிழ் மக்களின் வளர்ச்சிக்கும் இலட்சியத்துக்குமான பாதையில் யாரும் செல்லவில்லை என்ற மனவிரக்தி, கோபம் பல சமூக செயற்பாட்டாளர்களையும், அரசியல் செயற்பாட்டாளர்களையும், தன்முனைப்பாளர்களையும் தம்மாலே எல்லாம் முடியும் என்ற பேராசையுடன் தகுதி இல்லாமல் தகுதியற்ற இடத்தில் இருந்து தகுதியான மக்களை ஆளலாம் என்ற நப்பாசையை ஏற்படுத்தி இருக்கிறது.

தமிழர் தாயகத்தின் ஒவ்வொரு பிரதேசம்

அதேநேரத்தில் தமிழர் தாயகத்தின் ஒவ்வொரு பிரதேசத்திலும் செல்வாக்கு உள்ள தனிநபர்கள் பலரும் இந்த தேர்தலிலே சுயேட்சை போட்டியாளர்களாக போட்டியிட களத்துக்கு வந்துவிட்டனர். திரும்பும் திசையெங்கும் வேட்பாளராகவே தாயகத்தில் தென்படுகிறது. 

அதேநேரத்தில் வேட்பாளர்கள் உடைய வகைப்படுத்தல்கள் எவ்வாறு அமைகின்றது என்று பார்த்தால் சட்டத்தரணிகள், முன்னாள் ஆசிரியர்கள், வியாபாரிகள், தொண்டு நிறுவன ஊழியர்கள் என்ற வகைக்குள்ளேயே பெரும்பாலான வேட்பாளர்கள் அடங்குகின்றனர்.

இரு போட்டிக் கட்சியினருக்கும் ஒருவரே கூலிக்கு சுவரொட்டி ஒட்டும் தமிழ்த் தேர்தல் களநிலை | Tamil Election Field One Poster Both Rival Parties

இந்த வேட்பாளர்கள் சட்டம் படிப்பவர்கள் தேர்தலில் போட்டியிட வந்திருக்கிறார்கள் அல்லது அவர்களை அழைத்து வந்திருக்கிறார்கள். இது மிகவும் ஆபத்தான ஒரு கட்டத்தை நோக்கி செல்வதற்கான அறிகுறிதான். 

இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்ற கோஷத்துக்கு இந்த அரசியல்வாதிகள் செய்த வேலை யாதும் அறியா பாலகர்களை அரசியலில் கொண்டு வந்து நிறுத்தியதுதான்.

அதுவும் ஒரு கட்சி அவரை கொண்டு வருவதென பேசி ஒப்பந்தமிட்டுவர இன்னும் ஒரு கட்சி அவருக்கு இன்னொரு ஆசை வார்த்தை கூறி தம்பக்கம் எடுத்து வந்து தேர்தலில் நிறுத்த வைத்தார்கள்.

ஒரு நாளிலேயே ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு தாவும் மனநிலை என்னவென்று சொல்ல! அதே நேரத்தில் சிறுவர்களை இப்படி அரசியலில் கொண்டுவந்து நிறுத்தும் ஒரு தவறான முன்னுதாரணமாகவும் இது சொல்லப்பட வேண்டும். 

வன்னி தேர்தல் தொகுதியில் போட்டியிடுகின்ற ஒரு வேட்பாளர், இன்னொரு கட்சியில் போட்டியிடுகின்ற வேட்பாளரை அவர் போட்டியிடுகிறார் என்று அறியாமலே தற்செயலாக சந்தித்தபோது "எனக்கு நீங்கள் ஆதரவளிக்க வேண்டும் எனக்காக வேலை செய்ய வேண்டும்" என அந்த இளைய மாணவ வேட்பாளர் போராளி வேட்பாளரின் கையைப் பிடித்து கேட்ட. சம்பவம் கடந்த வாரம் மன்னார் ஆயர் இல்லத்தின் முன்னால் நடந்தது என்பதிலிருந்து நிலைமையைப் புரிந்துகொள்க. 

தமிழ் சமூகத்துக்கு ஆரோக்கியமானதல்ல

அவ்வாறே தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த பிற்பாடு தான் போட்டியிடுகின்ற தொகுதிக்குள் உள்ளடங்கும் பிரதேச செயலாளர் பிரிவுகளை தெரிந்து கொண்ட பல வேட்பாளர்கள் உள்ளார்கள்.

ஒரு மாவட்டத்தின் நிர்வாக ஒழுங்குமுறை பற்றி எதுவுமே தெரியாத பலர் வேட்பு மனு தாக்கல் செய்திருக்கிறார்கள் என்பதிலிருந்து இந்த தேர்தலில் போட்டியிடுபவர்களுடைய தகுதி, தராதரம் பற்றி எடை போட்டுக் கொள்க. 

இரு போட்டிக் கட்சியினருக்கும் ஒருவரே கூலிக்கு சுவரொட்டி ஒட்டும் தமிழ்த் தேர்தல் களநிலை | Tamil Election Field One Poster Both Rival Parties

இது இந்த நிலை என்றால் தமிழ் மக்களிடம், அதிகம் பாமர மக்களிடம் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போன்ற ஒரு நிலையே இப்போது தென்படுகிறது. தாம் யாரை நம்புவது, யாரின் பின்னே செல்வது, யாருக்கு வாக்களிப்பது என்பது ஒரு குழப்பகரமான நிலையிலே மக்கள் உள்ளனர்.

இந்த குழப்பகரமான நிலை தமிழ் சமூகத்துக்கு ஆரோக்கியமானதல்ல. தமிழ் அறிவியலாளர்களும், நேர்மையான அறிவார்ந்த ஊடகவியலாளர்களும் தமிழ் மக்களை வழிப்படுத்துவதற்கான கருத்தாளர்களை மிக வேகமாக தமிழர் தாயகத்தில் செய்ய வேண்டிய தேவை எழுந்திருக்கிறது. 

தமிழர் தாயகத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்து போட்டி களத்திலே இறங்கி இருக்கும் வேட்பாளர்கள் தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற, தமிழ் மக்களை அழிவுப்பாதைக்கு இட்டுச் செல்கின்ற, தமிழ் மக்களின் இருப்பையும் தாயகத்தின் இருப்பதையும் கேள்விக்கு உள்ளாக்குகின்ற செயற்பாடுகளுக்கு ஊக்கமளிக்க கூடிய வகையில் சிங்கள தேசிய கட்சிகளுடனும் சிங்கள இடதுசாரி அரசியலுக்குள்ளும் தாமும் அமர்ந்து போய் தமிழ் மக்களையும் அழித்துவிடும் அபாயகரமான ஒரு செல்நெறி தாயகத்தில் தற்போது நிலவுகிறது. 

தேர்தலுக்கான பிரசாரக் களம் 

பாமர மக்களுக்கு இந்த அரசியல் பித்தலாட்டங்கள் புரியவில்லை என்று எடுத்துக் கொண்டாலுங்கூட கல்வி கற்றிருக்கும் குறிப்பாக அரச ஊழியர்களுக்கு இன்றைய அநுரா அரசியல் சுனாமியை புரிந்து கொள்ள முடியவில்லை.

தமிழர் தாயகத்தின் ஊழல் பிசாசுகளின் பிடியிலிருந்து விடுபடுவதற்கு சிங்கள இடதுசாரி சாத்தான்களுடன் கூட்டுச் சேரவும் அவர்களுக்கு வாக்களிக்கவும் தமிழர்களின் கல்வி கற்ற ஒரு வர்க்கம் தயாராக இருக்கிறது என்பதையும் கவனத்தில் கொள்க. 

இரு போட்டிக் கட்சியினருக்கும் ஒருவரே கூலிக்கு சுவரொட்டி ஒட்டும் தமிழ்த் தேர்தல் களநிலை | Tamil Election Field One Poster Both Rival Parties

இவ்வாறு தேர்தலில் பலதரப்பட்ட வகையறாக்களும் போட்டியிடுகின்ற போதும் இன்றைய நிலவரம் என்னவெனில் இந்த தேர்தலுக்கான பிரசாரக் களம் இன்னும் சூடு பிடிக்கவில்லை.

புயலுக்கு முந்திய அமைதியாகவே தேர்தல் பிரசாரம் நடவடிக்கைகள் அமைந்திருப்பது போல தோன்றுகிறது.

நகரங்களின் சுவர்களில் பெரியளவு தேர்தல் சுவரொட்டிகளை காணமுடியவில்லை. கிராமப்புறங்களில் மந்தமான ஒரு சூழல் தென்படுகிறது.

ஆயினும் அடுத்த வாரங்களில் தமிழர் தாயகத்தின் சுற்று மதல்கள், தூண்கள், சுவர்கள் என அனைத்திலும் பலவர்ண சுரட்டிகள் ஒட்டப்பட்டு பொதுஜனங்களின் சுவர்கள் அலங்ககோலப்படுத்தப்படும் அறிகுறிகள் மட்டும் தற்போது தென்படுகிறது.  

தேர்தல் சட்ட ஒழுங்குகள் 

தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்ற தேர்தல் சட்ட காவல்துறை ஒழுங்குகள் இவற்றை ஓரளவு கட்டுப்படுத்தினாலுமங்கூட தேர்தலின் இறுதி வாரங்களில் இவை சூடுபிடிப்பது தவிர்க்க முடியாது.

இரு போட்டிக் கட்சியினருக்கும் ஒருவரே கூலிக்கு சுவரொட்டி ஒட்டும் தமிழ்த் தேர்தல் களநிலை | Tamil Election Field One Poster Both Rival Parties

ஒவ்வொரு வேட்பாளரும் தனக்குரிய பிரசாரப் பணிகளுக்கு சம்பளம் வழங்கப்பட்ட ஊழியர்களையே பயன்படுத்துகின்றனர்.

இங்கு என்ன விந்தை எனில் ஒரே நபர் இரண்டு கட்சிகளின் தேர்தல் பிரசாரத்திற்கான சுவரொட்டிகளை ஒட்டவும் துண்டு பிரசுரங்களை விநியோகிக்கவும் பயன்படுத்தப்படுகிறார் என்பதிலிருந்து தமிழர் தாயக அரசியல் எங்கு செல்கின்றது என்பதை புரிந்துகொள்க.

அதே நேரத்தில் இந்திய அரசியல் போன்று தேர்தலுக்கான மதுசார விருதுகள் அரங்கேறி விரிவடைந்து வருவதையும் அவதானிக்க முடிகிறது.

பொறுப்பு துறப்பு!

இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் T.Thibaharan அவரால் எழுதப்பட்டு, 28 October, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.

மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வட்டகச்சி, Mississauga, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Eastham, United Kingdom

15 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கரம்பொன்

05 May, 2018
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, வரணி, Toronto, Canada

18 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கெருடாவில், ஆலங்குளாய், சண்டிலிப்பாய், Scarborough, Canada

11 May, 2023
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

20 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை கம்பர்மலை, பரந்தன், London, United Kingdom

11 Apr, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Reggio Emilia, Italy, Hayes, United Kingdom

10 May, 2023
மரண அறிவித்தல்

இணுவில் மேற்கு, பிரான்ஸ், France

12 Apr, 2025
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், கோப்பாய், Katunayake, Toronto, Canada

17 Apr, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Biel/Bienne, Switzerland, Brampton, Canada

17 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், கொழும்பு

17 Apr, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, தெஹிவளை

15 Apr, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், புங்குடுதீவு 6ம் வட்டாரம், திருச்சி, India, Toronto, Canada

17 Apr, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாமடு, கணுக்கேணி மேற்கு, Brampton, Canada

29 Apr, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பேர்லின், Germany, Markham, Canada

28 Apr, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, பிரான்ஸ், France

18 Apr, 2020
மரண அறிவித்தல்

பரந்தன், துன்னாலை, திக்கம்

16 Apr, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கிளிநொச்சி, Brampton, Canada

16 Apr, 2024
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி மேற்கு

13 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கலிஃபோர்னியா, United States

16 Apr, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epsom, United Kingdom

16 Apr, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்டத்தரிப்பு, Spiez, Switzerland

17 Apr, 2000
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, Birmingham, United Kingdom

07 Apr, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

06 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், Greenford, United Kingdom

15 Apr, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், Buchs, Switzerland

18 Apr, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US