தமிழீழம் தொடர்பில் விஜயகாந்தின் நெகிழ்ச்சியான பார்வை

Vijayakanth Sri Lankan Tamils Sri Lanka
By Dharu Dec 28, 2023 09:00 PM GMT
Report

கோவிட் தொற்று காரணமாக மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் உடல்நலக்குறைவின் காரணமாக கடந்த மாதம் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில், சில தினங்களில் பூரண குணமடைந்து வீடு திரும்பி இருந்தார்.

தொடர்ந்து தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.

விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் தொடர்பில் குடும்பத்தினர் வெளியிட்ட அறிவிப்பு

விஜயகாந்தின் உடல் நல்லடக்கம் தொடர்பில் குடும்பத்தினர் வெளியிட்ட அறிவிப்பு

இந்நிலையில் நேற்றைய தினம் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக தே.மு.தி.க. தலைமை கழகம் அறிக்கை வெளியிட்டிருந்தது.

தமிழீழம் தொடர்பில் விஜயகாந்தின் நெகிழ்ச்சியான பார்வை | Tamil Eelam Protest Sri Lanka Vijayakanth

இன்று வெளியிட்ட அறிக்கையில் அவருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், மூச்சு விடுவதில் சிரமம் இருப்பதால் வெண்டிலேட்டர் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு சிகிச்சை பலனின்றி விஜயகாந்தின் உயிர் பிரிந்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜயகாந்த் உடலுக்கு முழு அரச மரியாதை: தமிழக முதல்வர் ஸ்டாலின்

விஜயகாந்த் உடலுக்கு முழு அரச மரியாதை: தமிழக முதல்வர் ஸ்டாலின்

தமிழ் மொழி மீதான பற்று

விஜயகாந்தினுடைய தமிழ் மொழி மீதான பற்றானது அளப்பரியது. குறிப்பாக ஈழத்தமிழர் மீதான பற்று குறிப்பிடத்தக்கது.

விஜயகாந்த் தனது 13 வயதில் மதுரையில் நடைபெற்ற 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டதாக தகவலும் சொல்லப்படுகிறது.

தமிழீழம் தொடர்பில் விஜயகாந்தின் நெகிழ்ச்சியான பார்வை | Tamil Eelam Protest Sri Lanka Vijayakanth

சிறுவயதிலேயே தமிழ்மீது கொண்ட அந்தப் பற்றுதான் திரைக்கலைஞனான பின்னும் வளர்ந்து, தமிழர்களுக்காகப் போராடவும் தூண்டியது. குறிப்பாக, 1980களின் பிற்பகுதியில் இலங்கையில் ஈழத்தமிழர்கள்மீது இலங்கை இராணுவம் மேற்கொண்ட கொடூரமானத் தாக்குதலில் ஏராளமான அப்பாவித் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

அதைக் கண்டு கொதித்தெழுந்த விஜயகாந்த், ஈழத்தமிழர்கள் மீதானப் படுகொலையைக் கண்டித்து சக நடிகர், நடிகைகளுடன் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதம் நடத்தியிருந்தார்.

1984களில் ஒரு நாள்.ஈழ விடுதலைப் போராட்டத்தின் நியாயப்பாடுகளை விளக்கி சென்னை முழுவதும் தீவிர பிரச்சாரத்திலும், உண்டியல் குலுக்கி தொழிற்சாலைகள், வர்த்தக நிலையங்கள்,வீடுகளில் நிதி சேகரிப்பிலும் போராளிகளாக ஈடுபட்ட வேளை, '' புரட்சி நடிகர் வீட்டுக்கும் செல்கிறோம்.

எங்களை பேசவிடவில்லை. இராயப்பேட்டை சத்யம் திரையரங்கில் ஊமை விழிகள்திரைப்பட ஒரு காட்சிக்கான வருமானம் முழுவதையும் எடுத்துக் கொள்ளுங்கள் என்றார்.

இலங்கையின் பொருளாதாரத்தில் மேல் மாகாணத்திற்கு கிடைத்துள்ள அங்கீகாரம்

இலங்கையின் பொருளாதாரத்தில் மேல் மாகாணத்திற்கு கிடைத்துள்ள அங்கீகாரம்

உண்ணாவிரத போராட்டம்

ஒவ்வொரு ஒற்றை ரூபாய்க்கும் உண்டியல் குலுக்கிய எங்கள் மனங்களில் அந்த மகான் நிறைந்து நின்றார். இன்றுவரை நிக்கிறார்.

மேலும், இந்தப் படுகொலையை நிறுத்தவேண்டும், ஈழத்தமிழர்களுக்கு நீதி வேண்டும் எனக்கோரி அப்போதைய தமிழ்நாடு ஆளுநரிடம் மனுவொன்றையும் வழங்கியிருந்தார்.

தமிழீழம் தொடர்பில் விஜயகாந்தின் நெகிழ்ச்சியான பார்வை | Tamil Eelam Protest Sri Lanka Vijayakanth

பின்னர், 1986ஆம் ஆண்டு இலங்கையில் ஈழத் தமிழர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து அதிகரித்து வந்ததால், அதை தடுக்கவேண்டும் எனக்கோரி சென்னை வட்டாட்சியர் அலுவலகத்தில் உண்ணாவிரதம் இருந்தார்.

தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்காகக் குரல்கொடுத்தது மட்டுமல்லாமல் தமிழ்நாடு முகாம்களில் அகதிகளாக தஞ்சம் புகுந்த ஈழத்தமிழர்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளைச் செய்திருந்தார்.

குறிப்பாக, 1989களில் மண்டபம் முகாம்களில் அகதிகளாக வசிப்பவர்களுக்கு நேரில்சென்று உதவிபுரிந்தார்.

எல்லாவற்றுக்கும் ஒருபடி மேலே சென்று, ஈழத்தமிழர்கள் படும் இன்னல்களுக்காக தனது பிறந்தநாள் கொண்டாடுவதையே தவிர்த்தார்.

இன்று நள்ளிரவு முதல் லங்கா சதொச நிறுவனத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் லங்கா சதொச நிறுவனத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை குறைப்பு

``ஈழத்தமிழர்கள் அழும்போது, என்னால் கொண்டாட்டத்தில் இருக்க முடியாது" என்று ஈழத்தமிழர்களின் வலியை உணர்ந்தவராக உணர்ச்சிப்பூர்வமாகப் பதிலளித்தார். (பின்னாள்களில் அவரின் பிறந்தநாள் வறுமை ஒழிப்பு தினமாக அறிவிக்கப்பட்டு, ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன).

அதன் சாட்சியாக தனது மூத்த மகனுக்கு `விஜய பிரபாகரன்’ என பெயர்வைத்து விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் மீதும், ஈழத்தின் மீதும் தனக்கிருந்த பற்றைப் பறைசாற்றினார்.

மேலும், தனது 100ஆவது படத்துக்கு வைத்த `கேப்டன் பிரபாகரன்’ என்ற பெயர்தான், அவரின் அடைமொழியாக நின்று இன்றுவரை அனைவராலும் அன்போடு `கேப்டன்' என அழைக்கப்படுகிறார்.

யாழ். மருதனார்மடம் பகுதியில் போதைப்பொருளுடன் இருவர் கைது

யாழ். மருதனார்மடம் பகுதியில் போதைப்பொருளுடன் இருவர் கைது

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, காங்கேசன்துறை, London, United Kingdom

23 Nov, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், கனடா, Canada

24 Nov, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

18 Nov, 2025
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, துணுக்காய்

19 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, கட்டுவன், முன்சன், Germany, Toronto, Canada, Peterborough, Canada

07 Dec, 2021
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அனலைதீவு 7ம் வட்டாரம், Brampton, Canada

21 Nov, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை மேற்கு

23 Nov, 2010
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

கருங்காலி சோலை, Bümpliz, Switzerland

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், Vancouver, Canada

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நுணாவில், Pickering, Canada

03 Dec, 2024
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

ஆவரங்கால், கொழும்பு, Toronto, Canada

19 Nov, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
மரண அறிவித்தல்

பெரிய கல்லாறு, London, United Kingdom

11 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, உடுப்பிட்டி, லுசேன், Switzerland

22 Nov, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கோவளம், திருகோணமலை, கொழும்பு

22 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
மரண அறிவித்தல்

செட்டிக்குளம் வவுனியா, Etobicoke, Canada

18 Nov, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

05 Nov, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US