இலங்கைக்கும் தென்னாப்பிரிக்காவுக்குமிடையில் பேச்சுவார்த்தை
சர்வதேச உறவுகள் மற்றும் ஒத்துழைப்புக்கான தென்னாப்பிரிக்க அமைச்சர் நலேடி பண்டோர் நியூயார்க்கில் உள்ள தென்னாப்பிரிக்காவின் நிரந்தர தூதரகத்தில், இலங்கையின் வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பீரிஸை சந்தித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் வளமான அனுபவம் மற்றும் நல்லிணக்கம் மற்றும் உண்மையை கண்டறிதல் ஆகிய துறைகளில் தனித்துவமான வரலாற்றை உன்னிப்பாக கவனித்துள்ளதாக அமைச்சர் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவின் சொந்த தேசிய அனுபவத்தில், பல அம்சங்களை குறிப்பிட்ட இலங்கையின் அமைச்சர், இதில் சில அம்சங்களை, காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீடு அலுவலகம் மற்றும் மோதலுக்குப் பிந்தைய அபிவிருத்தி, தேசிய ஒற்றுமை போன்ற விடயங்களில் இலங்கை பிரதிபலித்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, மோதலுக்குப் பிந்திய பிரச்சனைகளுக்கு தீர்வு காண விரும்பும் நாடுகளுடன் தங்கள் அனுபவங்களையும் பாடங்களையும் பகிர்ந்து கொள்வதில் தென்னாப்பிரிக்கா மகிழ்ச்சியடைவதாகவும், கடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் இழப்பீடு தொடர்பான பிரச்சனைகள் குறித்து அவர்கள் தொடர்ந்து பாடங்களைக் கற்றுக்கொள்வதாகவும் அமைச்சர் பண்டோர் எடுத்துரைத்துள்ளார்.


புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 4 மணி நேரம் முன்

தனது லுக்கை கலாய்த்தவர்களுக்கு சரியான பதிலடி கொடுத்த பாக்கியலட்சுமி சீரியல் நடிகை நேஹா...வைரல் Cineulagam
